கோலாலம்பூர், ஆகஸ்ட் 21-
அடுத்த மாதம் 28-ஆம் தேதி நடைபெறவுள்ள மஹ்கோட்டா மாநில சட்டமன்ற இடைத்தேர்தலில், ஒற்றுமை அரசாங்கத்தை பிரிதிநித்து களமிறங்கவுள்ள வேட்பாளர் யார் என்பதை அம்னோ இன்னும் முடிவு செய்யவில்லை, அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அஹ்மத் ஜாஹித் ஹமிடி கூறியுள்ளார்.
அதோடு, ஜொகூர் அம்னோ பிரிவையும் தேசிய முன்னனியையும் உட்படுத்தி அது தொடர்பான கூட்டம் அடுத்த வாரம் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
பிடடோ பியாலா டத்தோ நூருள் அமல் போட்டியின் நிறைவு விழாவிற்கு பின் டத்தோஸ்ரீ அஹ்மத் ஜாஹித் ஹமிடி அக்கூற்றை கூறினார்.








