Aug 12, 2026
Thisaigal NewsYouTube
என்வி சுப்பாராவிற்கு புகையிலை எதிர்ப்பு நாயகர் விருது
தற்போதைய செய்திகள்

என்வி சுப்பாராவிற்கு புகையிலை எதிர்ப்பு நாயகர் விருது

Share:

சைபர் ஜெயா, மே.31-

பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் வாயிலாக கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக புகையிலைப் பயன்பாட்டிற்கு எதிராகப் போராடி வரும் அந்த சங்கத்தின் கல்வி மேம்பாட்டுப் பிரவு அதிகாரி என்வி சுப்பாராவிற்கு புகையிலை எதிர்ப்பு நாயகன் எனும் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளது.

புகையிலையை அடிப்படையாகக் கொண்டு சிகரெட் புகைப்பதால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக மக்களிடையே சுப்பாராவ் விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்.

சுப்பாராவின் சீரிய பங்களிப்பைக் கருத்தில் கொண்டு, சைபர் ஜெயாவில் நடைபெற்ற உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு அவருக்கு சுகாதார அமைச்சர் டாக்டர் சுல்கிப்ளி அஹ்மாட் இவ்விருதினை வழங்கினார்.

சுப்பாராவ், பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் தோற்றுநர் மறைந்த எஸ்.எம் இட்ரிஸின் முதன்மை உதவியாளராக விளங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News