Jul 27, 2026
Thisaigal NewsYouTube
மீண்டும் ஒருமுறை முதலமைச்சராக இருக்க விரும்புகிறேன்
தற்போதைய செய்திகள்

மீண்டும் ஒருமுறை முதலமைச்சராக இருக்க விரும்புகிறேன்

Share:

வருகின்ற பினாங்கு சட்டமன்ற தேர்தலில், பாடாங் கோத்தா தொகுதியை மீண்டும் தற்காத்துக் கொள்வதற்கு நோக்கம் கொண்டிருக்கும், பினாங்கு முதல்வர் சௌ கொன் யோவ், மீண்டும் ஒருமுறை முதலமைச்சராக இருக்க விரும்புவதாக அறிவித்துள்ளார்.

நடைபெறவிருக்கும் 15 ஆவது சட்டமன்ற தேர்தல், தாம் சந்திக்கும் கடைசி களமாக இருக்கும் என்று குறிப்பிட்ட சௌ கொன் யோவ், பாடாங் கோத்தா தொகுதியில் மீண்டும் ஒருமுறை போட்டியிடும் தமது விருப்பத்தை இன்று வெளிப்படுத்தியுள்ளார்.

அடுத்த 5 ஆண்டுகளில் 70 வயதை எட்ட விருக்கும் தாம், தேர்தலில் போட்டியிடுவது இதுவே கடைசி முறையாகும் என்றார்.

Related News