Apr 1, 2026
Thisaigal NewsYouTube
பேருந்து ஓட்டுநர் தாக்கப்பட்ட சம்பவம், இருவரைப் போலீஸ் தேடுகிறது
தற்போதைய செய்திகள்

பேருந்து ஓட்டுநர் தாக்கப்பட்ட சம்பவம், இருவரைப் போலீஸ் தேடுகிறது

Share:

குளுவாங், ஏப்ரல்.04-

தாங்கள் பயணம் செய்த காரை, பின்புறத்தில் மோதி விட்டார் என்பதற்காக பேருந்து ஓட்டுநர் ஒருவருடன் வாய்த் தகராற்றில் ஈடுபட்டு, அவரை கண்மூடித்தனமாகத் தாக்கியதாக நம்பப்படும் இருவரைப் போலீசார் தேடி வருகின்றனர்.

கடந்த புதன்கிழமை பிற்பகல் 3 மணியளவில் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 58.5 ஆவது கிலோ மீட்டரில் குளுவாங் அருகில் நிகழ்ந்த இந்த சம்பவம் தொடர்பிலான காணொளியை அடிப்படையாகக் கொண்டு ஆராயப்பட்டதில் சம்பந்தப்பட்ட அந்த இரண்டு சந்தேகப் பேர்வழிகள், அந்த பேருந்து ஓட்டுநரை அடித்துக் காயப்படுத்தியுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் இரண்டு வெவ்வேறு தரப்பினரிடரிமிருந்து தாங்கள் இரண்டு போலீஸ் புகார்களைப் பெற்றுள்ளதாக குளுவாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி பாஹ்ரேன் நோ தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து புலன் விசாரணை செய்யப்பட்டு வரும் வேளையில் இதனை நேரில் பார்த்தவர்கள், புலன் விசாரணைக்கு உதவும்படி ஏசிபி பாஹ்ரேன் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related News

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0'  அதிரடி தொடக்கம்

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0' அதிரடி தொடக்கம்

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

எரிபொருள்  நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

எரிபொருள் நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்:  போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்: போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்