Jul 2, 2026
Thisaigal NewsYouTube
விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும்
தற்போதைய செய்திகள்

விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும்

Share:

நீலாய், செப்டம்பர்.27-

நீலாய், லெங்கெங்கில் உள்ள தொடக்கப்பள்ளி ஒன்றின் விளையாட்டுப் போட்டியின் போது, பள்ளி வளாகத்தில் உள்ள சாக்கடைக் குழியில் விழுந்து ஒன்பது வயது மாணவன் மரணமுற்ற சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்துமாறு நெகிரி செம்பிலான் மாநில கல்வி இலாகாவிற்கு, கல்வி அமைச்சு உத்தரவிட்டுள்ளது.

இன்று காலையில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் பள்ளி வளாகத்தில் மூடப்படாமல் இருந்த சாக்கடைக் குழியில் விழுந்து மாணவன் மரணமுற்ற சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் உடனடியாக விசாரணையைத் தொடங்குமாறு கல்வித் தலைமை இயக்குநர் அஸாம் அமாட் உத்தரவிட்டார்.

அதே வேளையில் பள்ளி வளாகத்தில் உள்ள வசதிகள் அனைத்தும் பாதுகாப்பானவை என்பதை பள்ளி நிர்வாகம், மாவட்ட கல்வி அலுவலகம் மற்றும் மாநில கல்வி இலாகா உறுதி செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

Related News

சென்னா தொகுதியில் யார் எதிர்த்துப் போட்டியிட்டாலும் கவலையில்லை!- அந்தோணி லோக்

சென்னா தொகுதியில் யார் எதிர்த்துப் போட்டியிட்டாலும் கவலையில்லை!- அந்தோணி லோக்

ஜோகூர் தேர்தல்: பெர்லிங் தொகுதி பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் அலன் தீ பூன் சோங் குறித்த சிறப்புப் பார்வை

ஜோகூர் தேர்தல்: பெர்லிங் தொகுதி பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் அலன் தீ பூன் சோங் குறித்த சிறப்புப் பார்வை

ஆபாசப் படங்களை பகிர்ந்ததாக பவித்ரா மீது குற்றச்சாட்டு

ஆபாசப் படங்களை பகிர்ந்ததாக பவித்ரா மீது குற்றச்சாட்டு

ஜோ லோவுக்கு டொனால்ட் டிரம்ப்,  பொதுமன்னிப்பு வழங்க ஆலோசனை?: வெள்ளை மாளிகை மறுப்பு

ஜோ லோவுக்கு டொனால்ட் டிரம்ப், பொதுமன்னிப்பு வழங்க ஆலோசனை?: வெள்ளை மாளிகை மறுப்பு

ஆண்களை மேம்படுத்த 'தேசிய லெலாகி புடிமான் ஆய்வு' இந்த மாதம் தொடங்குகிறது: நான்சி சுக்ரி

ஆண்களை மேம்படுத்த 'தேசிய லெலாகி புடிமான் ஆய்வு' இந்த மாதம் தொடங்குகிறது: நான்சி சுக்ரி

சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவ விழா: ஜூலை 4-இல் பிரம்மாண்ட பால்குடமும் சப்த இரத ஊர்வலமும்

சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவ விழா: ஜூலை 4-இல் பிரம்மாண்ட பால்குடமும் சப்த இரத ஊர்வலமும்