Apr 4, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

கூட்டரசு நீதிமன்ற நீதிபதி அகமட் தெரிரிருடின் பதவி விலக வேண்டும்

Share:

கோலாலம்பூர், ஜன. 18-


சட்டத்துறை தலைவர் பதவியிலிருந்து கூட்டரசு நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்த்தப்பட்டுள்ள அகமட் தெரிரிருடின் , பதவி விலக வேண்டும் என்று நாட்டின் மூத்த வழக்கறிஞரும், முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் முதன்மை சட்ட ஆலோசகருமான முகமட் ஷாபி அப்துல்லா இன்று கோரிக்கை விடுத்துள்ளார்.

சட்டத்துறை தலைவராக பதவி வகித்த காலத்தில் நஜீப் சம்பந்தப்பட்ட அரசாணை தொடர்பில், நீதிமன்றத்தை குழப்பியிருக்கும் அகமட் தெரிரிருடின் , தனது செயலுக்கு தார்மீகப் பொறுப்பு ஏற்று தற்போதைய தனது கூட்டரசு நீதிமன்ற நீதிபதி பதவியை துறக்க வேண்டும் என்று ஷாபி அப்துல்லா கேட்டுக்கொண்டார்.

நாட்டின் சட்டத்துறை தலைவராக பதவி வகித்த காலத்தில் நஜீப் விவகாரத்தில் 16 ஆவது மாமன்னர் பிறப்பித்துள்ள ஓர் அரசாணை உத்தரவு உள்ளது என்பதை நன்கு தெரிந்திருந்தும், எதுவும் நடவாது போல அகமட் தெரிரிருடின் நடந்து கொண்டுள்ளார் என்று ஷாபி அப்துல்லா குற்றஞ்சாட்டினார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 12 ஆம் தேதி கூட்டரசு நீதிமன்ற நீதிபதியாக அகமட் தெரிரிருடின் நியமிக்கப்படுவதற்கு முன்னர் அவர் சட்டத்துறை தலைவராக பதவியில் அமர்த்தப்பட்டுள்ளார்.

நஜீப் தனது எஞ்சிய சிறைத் தண்டனை காலத்தை வீட்டுக் காவலில் கழிப்பதற்கு ஓர் அரசாணை உத்தரவு இருப்பதாக சர்ச்சை உருவான போது, நாட்டின் சட்டத்துறைக்கு தலைமையேற்றுள்ள அட்டார்னி ஜெனரல் என்ற முறையில் அகமட் தெரிரிருடின் இவ்விவகாரத்தை உடனடியாக விளக்கி, அந்த உண்மையை வெளிச்சம் போட்டு காட்டியிருக்க வேண்டும்.

ஆனால், அதனை செய்யாமல், அந்த அரசாணை உத்தரவை ஒரு மூடுமந்திரம் போல் மறைத்ததன் காரணமாகவே இன்று இத்தனை சிக்கல்களையும், வில்லங்களையும் சுமக்க வேண்டிய கட்டாயத்திற்கு பலர் ஆளாகியிருக்கின்றனர் என்று ஷாபி அப்துல்லா வாதிட்டுள்ளார்.

Related News

இந்திய வம்சாவளி கோவில் கட்டடக்கலை கண்காட்சி: கோலாலம்பூரில் கோபிந்த் சிங் டியோ தொடங்கி வைத்தார்

இந்திய வம்சாவளி கோவில் கட்டடக்கலை கண்காட்சி: கோலாலம்பூரில் கோபிந்த் சிங் டியோ தொடங்கி வைத்தார்

 பத்து பஹாட் கடற்கரைப் பகுதியில் மிதமான நிலநடுக்கம்

பத்து பஹாட் கடற்கரைப் பகுதியில் மிதமான நிலநடுக்கம்

MATTA FAIR  கண்காட்சி 2026: சிலாங்கூரின் புதிய சுற்றுலாத் திட்டங்கள் மற்றும் 'கிள்ளான் அரச பாரம்பரிய' நடைப்பயணம் அறிமுகம்

MATTA FAIR கண்காட்சி 2026: சிலாங்கூரின் புதிய சுற்றுலாத் திட்டங்கள் மற்றும் 'கிள்ளான் அரச பாரம்பரிய' நடைப்பயணம் அறிமுகம்

மசீச. முன்னாள்  தலைவர்  துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

மசீச. முன்னாள் தலைவர் துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை  கைது

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை கைது

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்