கோலாலம்பூர்,ஜன.19
பிகேஆர் கட்சியின் இளைஞர் பிரிவைச் சேர்ந்த மேலும் பலர், முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமதுவிற்கு எதிராக போலீஸ் புகார் செய்துள்ளனர். மலேசிய இந்தியர்கள் நாட்டிற்கு விசுவாசமற்றவர்கள் என்று சர்ச்சைக்குரிய கருத்தை துன் மகாதீர் வெளியிட்டதைத் தொடர்ந்து அவருக்கு எதிராக தேச நிந்தனை சட்டம் பாய வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
பிகேஆர் இளைஞர் பிரிவின் உச்சமன்ற உறுப்பினர் எம். சதாசிவம் தலைமையிலான கட்சி உறுப்பினர்கள் நேற்று மாலையில் கோலாலம்பூர், Travers போலீஸ் நிலையத்தில் இப்புகாரை செய்தனர். துன் மகாதீர், தொடர்ந்து இந்திய சமுதாயத்தை சீண்டிப் பார்ப்பதை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று அவர்கள் தங்கள் போலீஸ் புகாரில் கேட்டுக்கொண்டுள்ளனர்.








