May 24, 2026
Thisaigal NewsYouTube
மேம்பாலத்திலிருந்து கற்களை எரிந்த நபர்
தற்போதைய செய்திகள்

மேம்பாலத்திலிருந்து கற்களை எரிந்த நபர்

Share:

கோலாலம்பூர்,ஆகஸ்ட் 03-

மேம்பாலத்திலிருந்து கற்களை தூக்கி எறிந்து வாகனங்களை சேதப்படுத்தியதாக நம்பப்படும் ஆடவர் ஒருரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோலாலம்பூர் Jalan Imbi-யில் நிகழ்ந்தாக கூறப்படும் இச்சம்பவம் தொடர்பில் நேற்று மாலை 5 மணியளவில் போலீசார் ஒரு புகாரை பெற்றுள்ளனர்.

இச்சம்பவத்தில் தனது ஆண் நண்பருக்கு சொந்தமான காரின் பின் கண்ணாடி உடைந்து சிதறியதாக Hui Min Chia என்று மட்டுமே அடையாளம் கூறிக்கொண்டபெண் ஒருவர் தனது முகநூலில் தெரிவித்துள்ளார்.

Monorel ரயில் நிலையத்திற்கு செல்லும் மேம்பாலத்தில் ஆடவர் ஒருவர் இந்த கைங்கரியத்தை புரிந்துள்ளதாக நம்பப்படுகிறது.

மதியம் 12.30 மணிக்கும், பிற்பகல் 1.30 க்கும் இடைப்பட்ட நேரத்தில் நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பாக குற்றவியல் சட்டம் 427 ஆவது பிரிவின் கீழ் ஆடவர் ஒருவரை போலீசார் தேடி வருவதாக Dang Wangi மாவட்ட போலீஸ் தலைவர் Superintendan Nuzulan Mohd Din தெரிவித்துள்ளார்.

Related News

மேம்பாலத்திலிருந்து கற்களை எரிந்த நபர் | Thisaigal News