May 15, 2026
Thisaigal NewsYouTube
ஈஸ்வரன் குடும்பத்தில் ஒளி ஏற்றப்பட்டது
தற்போதைய செய்திகள்

ஈஸ்வரன் குடும்பத்தில் ஒளி ஏற்றப்பட்டது

Share:

ஜார்ஜ்டவுன், அக்டோபர்.16-

பினாங்கு, குபுங் உலு, பெனாந்தியில் உள்ள ஈஸ்வரன் தம்பதியரின் இருப்பிடத்தை மாற்றி அமைத்து அவர்களின் குடும்பத்திற்கு தீபாவளி ஒளி ஏற்றப்பட்டு இருப்பதாக பினாங்கு மாநில கெஅடிலான் கட்சியின் இளைஞர் மன்றத்தின் தலைவர் முகமட் ஸக்வான் முஸ்தஃபா கமால் தெரிவித்தார்.

தீபாவளி பண்டிகையில் ஈஸ்வரன் குடும்பத்தினரும் சிறப்பான முறையில் பெருநாளைக் கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தில் பினாங்கு மாநிலத்துடன் பெனாந்தி கெஅடிலான் இளைஞர் மன்றத்தினர் இணைந்து ஈஸ்வரன் வீட்டிற்குச் சாயம் பூசப்பட்டு , வீட்டைச் சுற்றி சுத்தம் செய்யப்பட்டு அழகுப்படுத்தப்பட்டதாக முகமட் ஸக்வான் கூறினார்.

அது மட்டுமின்றி, ஈஸ்வரன் குடும்பத்திற்குத் தேவையான மின்சாரப் பொருட்களும் வாங்கித் தரப்பட்டன. ஈஸ்வரன் குடும்பத்தினர் அண்மைய காலமாக பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதை அங்குள்ள சில நல்லுள்ளங்கள் கெஅடிலான் இளைஞர் மன்றத்திடம் தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டார்.

அதன் அடிப்படையில், பினாங்கு மாநில கெஅடிலான் இளைஞர் மன்றத்தால் இயன்ற உதவிகள் செய்யப்பட்டுள்ளன.

இனம் மதம் வேறுபாடுயின்றி மனித நேயத்தின் அடிப்படையில் மக்களுக்கு உதவி கரம் நீட்டுவதே பினாங்கு மாநில கெஅடிலான் கட்சியின் இளைஞர் மன்றத்தின் கொள்கையாகும்.

எனவே, இவ்வாண்டின் தீபாவளிப் பண்டிகையை ஈஸ்வரன் குடும்பத்தினர் சிறப்பாகக் கொண்டாடுவதற்கு கெஅடிலான் இளைஞர் மன்றமும் முக்கிய பங்கு வகித்திருப்பது குறித்து மனநிறைவு கொள்வதாக முகமட் ஸக்வான் குறிப்பிட்டார்.

Related News

மலேசிய இளைஞர் மன்றத்திற்கு 5 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு / தேசிய இளைஞர் தினக் கொண்டாட்டத்தில் அன்வார் அறிவிப்பு

மலேசிய இளைஞர் மன்றத்திற்கு 5 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு / தேசிய இளைஞர் தினக் கொண்டாட்டத்தில் அன்வார் அறிவிப்பு

பள்ளி கேண்டினில் எலிக் கழிவுகள்:  ஒப்பந்ததாரருக்கு சம்மன் - தூய்மைப் பணிகள் தீவிரம்

பள்ளி கேண்டினில் எலிக் கழிவுகள்: ஒப்பந்ததாரருக்கு சம்மன் - தூய்மைப் பணிகள் தீவிரம்

பேங்க் நெகாராவில் தீவிபத்து - ஜெனரேட்டர் அறை சேதமடைந்தது

பேங்க் நெகாராவில் தீவிபத்து - ஜெனரேட்டர் அறை சேதமடைந்தது

அசாம் பாக்கி தொடர்பான சிறப்பு விசாரணைக் குழு அறிக்கையை பொதுமக்களுக்கு வெளியிட வேண்டும் – கோபிந்த் சிங் டியோ

அசாம் பாக்கி தொடர்பான சிறப்பு விசாரணைக் குழு அறிக்கையை பொதுமக்களுக்கு வெளியிட வேண்டும் – கோபிந்த் சிங் டியோ

மாணவர்கள் மோதல் சம்பவம்: இன்ஸ்ட்கிராம் பதிவே மோதலுக்கான காரணம் என கெடா போலீஸ் தகவல்

மாணவர்கள் மோதல் சம்பவம்: இன்ஸ்ட்கிராம் பதிவே மோதலுக்கான காரணம் என கெடா போலீஸ் தகவல்

கெப்போங் உணவகத்தில் முறைத்துப் பார்த்தவரைக் கடுமையாக தாக்கிய மூவர் மீது குற்றச்சாட்டு

கெப்போங் உணவகத்தில் முறைத்துப் பார்த்தவரைக் கடுமையாக தாக்கிய மூவர் மீது குற்றச்சாட்டு