Jun 16, 2026
Thisaigal NewsYouTube
சான் சோ லின் எல்ஆர்டி விபத்து: முழு பொறுப்பேற்பதாக அந்தோணி லோக் உறுதி
தற்போதைய செய்திகள்

சான் சோ லின் எல்ஆர்டி விபத்து: முழு பொறுப்பேற்பதாக அந்தோணி லோக் உறுதி

Share:

கோலாலம்பூர், சான் சோ லின் எல்ஆர்டி இரயில் தடம் புரண்ட விபத்திற்குத் தான் முழு பொறுப்பேற்பதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.

இந்த விபத்து மிகுந்த ஏமாற்றமளித்தாலும், தற்காப்புப் பொறுப்பிலிருந்து தான் பின்வாங்கப் போவதில்லை என்று சான் சோ லின் இரயில் நிலையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறினார்.

இந்த விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய ஒரு சுயேட்சை சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதன் அடிப்படையில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும்போதெல்லாம் பதவியை ராஜினாமா செய்வது தீர்வல்ல என்றும், பொறுப்பு என்பது சரியான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்வதே என்றும் அவர் விளக்கமளித்தார்.

மேலும், பிரசரானா நிறுவனத்திற்குப் போக்குவரத்து அமைச்சின் ஆதரவு தொடர்ந்து வழங்கப்படும் என்றும், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் உறுதியளித்தார்.

Related News

"பெர்சாத்துவை அவரவர் விருப்பப்படி கூட்டணியில் இருந்து விலக்க முடியாது" - முகைதீன் யாசினின் முன்னாள் உதவியாளர் கருத்து

"பெர்சாத்துவை அவரவர் விருப்பப்படி கூட்டணியில் இருந்து விலக்க முடியாது" - முகைதீன் யாசினின் முன்னாள் உதவியாளர் கருத்து

மலேசியாவின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்யும் அன்வாரின் ரஷிய பயணம் / அதிபர் புதினுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை

மலேசியாவின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்யும் அன்வாரின் ரஷிய பயணம் / அதிபர் புதினுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை

திரங்காணுவில் தங்கும்விடுதியில் வைத்து மாணவரைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக ஆசிரியர் மீது குற்றச்சாட்டு

திரங்காணுவில் தங்கும்விடுதியில் வைத்து மாணவரைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக ஆசிரியர் மீது குற்றச்சாட்டு

பெக்கானில் போலி மருத்துவச் சான்றிதழ் விற்பனை - 3 பேர் கைது

பெக்கானில் போலி மருத்துவச் சான்றிதழ் விற்பனை - 3 பேர் கைது

காஜாங்கில் அடுக்குமாடிக் குடியிருப்பிலிருந்து கீழே விழுந்த 11 வயது சிறுவன் உயிரிழப்பு

காஜாங்கில் அடுக்குமாடிக் குடியிருப்பிலிருந்து கீழே விழுந்த 11 வயது சிறுவன் உயிரிழப்பு

புக்கிட் கியாரா குடியிருப்பாளர்களின் 44 ஆண்டுகால இழுபறிக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரதமர் - அமைச்சர் ரமணன் நெகிழ்ச்சி

புக்கிட் கியாரா குடியிருப்பாளர்களின் 44 ஆண்டுகால இழுபறிக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரதமர் - அமைச்சர் ரமணன் நெகிழ்ச்சி