கோலாலம்பூர், சான் சோ லின் எல்ஆர்டி இரயில் தடம் புரண்ட விபத்திற்குத் தான் முழு பொறுப்பேற்பதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்து மிகுந்த ஏமாற்றமளித்தாலும், தற்காப்புப் பொறுப்பிலிருந்து தான் பின்வாங்கப் போவதில்லை என்று சான் சோ லின் இரயில் நிலையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறினார்.
இந்த விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய ஒரு சுயேட்சை சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதன் அடிப்படையில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும்போதெல்லாம் பதவியை ராஜினாமா செய்வது தீர்வல்ல என்றும், பொறுப்பு என்பது சரியான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்வதே என்றும் அவர் விளக்கமளித்தார்.
மேலும், பிரசரானா நிறுவனத்திற்குப் போக்குவரத்து அமைச்சின் ஆதரவு தொடர்ந்து வழங்கப்படும் என்றும், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் உறுதியளித்தார்.








