Mar 13, 2026
Thisaigal NewsYouTube
யாகாவராயினும் நா காக்க ! சனுசியை எச்சரித்த அமைச்சர் கிங் சிங்
தற்போதைய செய்திகள்

யாகாவராயினும் நா காக்க ! சனுசியை எச்சரித்த அமைச்சர் கிங் சிங்

Share:

கெடா மாநிலத்திற்கு அதிகமான சுற்றுப் பயணிகள் வர வேண்டும் என்றால் அம்மாநில முதல்வர் சனுசி நோர் தமது சொற்கலில் கவனம் தேவை என எச்சரித்துள்ளார் சுற்றுலா, கலை பண்பாட்டு அமைச்சர் தியோங் கிங் சிங்.

கடந்த வாரம் கெடா மாநில சட்டமன்றக் கூட்டத்தில், சனுசி தியோங்கை "மொட்டைத் தலை. பானை வயிறு கொண்ட கோயில்" என்று மரியாதை இல்லாமல் பேசியதாகக் கூறப்பட்டது.

கடந்த மாதம் தாய்லாந்தின் சடாவோவில் அந்நாட்டுப் பிரதமர் ச்ரெத்தா தவிசின் உடனான சந்திப்பில் பிரதமர் அன்வார் இப்ராஹிமுடன் சென்றபோது, கெடாவின் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கு தியோங் போதுமான அளவு முயற்சிகள் மேற்கொள்ளவில்லை என்று சனுசி குற்றம் சாட்டினார்.

தமது நா காக்கப்பட வில்லை என்றால் நடப்புச் சூழலைக் காட்டிலும் மிக மோசமான பின் விளைவுகளை அம்மாநிலச் சுற்றுலாத் துறை சந்திக்க நேரிடுவதோடு யாருக்கும் பயனில்லாத நிலை ஏற்படும் என தியொங் எச்சரித்துள்ளார்.

சனுசி வெளியிட்ட மரியாதை அற்றக் கூற்றை மீட்டும் கொண்டு தியோங்கிடம் மன்னிப்பு கேட்க வேன்டும் என சரவாக் மாநில சுற்றுலாத் துறை, புத்தாக்கத் தொழில்துறை, கலைத்துறை அமைச்சர் அப்துல் கரிம் ரஹ்மான் ஹம்ஸா வலியுறுத்தினார்.

இருப்பினும், தியோங் சனுசியின் கேலியை நிராகரித்தார், ஏனெனில் தியோங்கைப் பொறுத்தவரை இது சனுசியின் அரசியலில் ஒரு பகுதியாகும் என தியோங் கூறினார்.

Related News

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்

காவற்படை வாகனத்தை மோதிவிட்டு 10 கி.மீ தூரம் தப்பியோடிய நபர் கைது

காவற்படை வாகனத்தை மோதிவிட்டு 10 கி.மீ தூரம் தப்பியோடிய நபர் கைது

அல்-அக்ஸா பள்ளிவாசலை மூடும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு மலேசியா கடும் கண்டனம் / பாலஸ்தீனர்களுக்கு எதிரான கொடூரச் செயல் என விமர்சித்தது

அல்-அக்ஸா பள்ளிவாசலை மூடும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு மலேசியா கடும் கண்டனம் / பாலஸ்தீனர்களுக்கு எதிரான கொடூரச் செயல் என விமர்சித்தது

புக்கிட் காயு ஹித்தாம் துப்பாக்கிச் சூடு சம்பவம்: பொது செயல்பாட்டுப் படை அதிகாரி கைது

புக்கிட் காயு ஹித்தாம் துப்பாக்கிச் சூடு சம்பவம்: பொது செயல்பாட்டுப் படை அதிகாரி கைது

மேற்கு சவுதியிலிருந்த மலேசியர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர் – தூதரகம் அறிவிப்பு

மேற்கு சவுதியிலிருந்த மலேசியர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர் – தூதரகம் அறிவிப்பு