ஷா ஆலம் , ஜூலை 03-
பெர்சத்து கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ள காப்பார் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட செலாட் கிள்ளான் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ அப்துல் ரஷித் ஆசாரி, தொகுதியை காலி செய்ய வேண்டுமா? என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று சிலாங்கூர் மாநில சட்டமன்ற சபா நாயகர் லாவ் வெங் சான் தெரிவித்துள்ளார்.
இடைத் தேர்தலுக்கு வழிவிடும் வகையில் அப்துல் ரஷீத் , எதற்காக தொகுதியை காலி செய்ய வேண்டும் என்பதற்கு பெர்சத்து கட்சி வழங்கியுள்ள ஆவணங்கள் குறித்து முடிவு எடுப்பதற்கு முன்னதாக, அவற்றின் உள்ளடக்கத்தை ஆராய வேண்டியுள்ளது என்று சபா நாயகர் லாவ் குறிப்பிட்டார்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி-க்கு ஆதரவு தெரிவித்தற்காக பெர்சத்து கட்சியிலிருந்து அப்துல் ரஷீத் நீக்கப்பட்டுள்ளார்.








