கெடா மாநிலத்தில் அரிய கனிமவள மண் தோண்டும் சட்ட விரோத சுரங்க நடவடிக்கையில் லஞ்சம் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் தொடர்பில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ் பி ஆர் எம் மேலும் ஒரு நபரை கைது செய்துள்ளது.
கெடா மாநில அரசாங்கத்தில் உயர் பதவி வகித்து வரும் 50 வயது மதிக்கத்தக்க அந்த நபர்,நேற்று இரவு 8 மணியளவில் அலோர் ஸ்டார், எஸ் பி ஆர் எம் அலுவலகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பந்தப்பட்ட நபர், நிறுவனம் ஒன்றிடமிருந்து 10 லட்சம் வெள்ளியை லஞ்சமாக பெற்றதாக கூறப்படுகிறது.அந்த நபரை வரும் ஜுலை 26 ஆம் தேதி ரை தடுத்து வைப்பதற்கு அலோர் ஸ்டார் மாஜிஸ்திரேட் நீதிமன்றம், எஸ் பி ஆர் எம் மிற்கு அனுமதி வழங்கியுள்ளது.
கெடா மந்திரி புசார் வாரியத்தின் தலைமை செயல்முறை அதிகாரி, நிறுவனம் ஒன்றின் உதவியாளர் உட்பட சட்ட விரோத சுரங்க நடவடிக்கை ஊழல் தொடர்பில் இதுவரையில் நால்வரை எஸ் பி ஆர் எம் கைது செய்துள்ளது.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை


