கெடா மாநிலத்தில் அரிய கனிமவள மண் தோண்டும் சட்ட விரோத சுரங்க நடவடிக்கையில் லஞ்சம் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் தொடர்பில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ் பி ஆர் எம் மேலும் ஒரு நபரை கைது செய்துள்ளது.
கெடா மாநில அரசாங்கத்தில் உயர் பதவி வகித்து வரும் 50 வயது மதிக்கத்தக்க அந்த நபர்,நேற்று இரவு 8 மணியளவில் அலோர் ஸ்டார், எஸ் பி ஆர் எம் அலுவலகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பந்தப்பட்ட நபர், நிறுவனம் ஒன்றிடமிருந்து 10 லட்சம் வெள்ளியை லஞ்சமாக பெற்றதாக கூறப்படுகிறது.அந்த நபரை வரும் ஜுலை 26 ஆம் தேதி ரை தடுத்து வைப்பதற்கு அலோர் ஸ்டார் மாஜிஸ்திரேட் நீதிமன்றம், எஸ் பி ஆர் எம் மிற்கு அனுமதி வழங்கியுள்ளது.
கெடா மந்திரி புசார் வாரியத்தின் தலைமை செயல்முறை அதிகாரி, நிறுவனம் ஒன்றின் உதவியாளர் உட்பட சட்ட விரோத சுரங்க நடவடிக்கை ஊழல் தொடர்பில் இதுவரையில் நால்வரை எஸ் பி ஆர் எம் கைது செய்துள்ளது.

Related News

மார்பக அழகு சிகிச்சை தோல்வி: சிகையலங்கார நிபுணருக்கு 110,000 வெள்ளி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

பாஸ்டர் கோ கடத்தப்பட்ட விவகாரம்: சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்துறைத் தலைவருக்கு கோரிக்கை

பெட்ரோல் ரோன் 97, டீசல் விலையில் 2 காசு உயர்வு

அமெரிக்கா - ஐரோப்பிய ஒன்றிய வரிக் கவலைகளுக்கு மத்தியில் ரிங்கிட் உயர்வுடன் நிறைவு

கால்பந்து வீரர்களுக்குக் குடியுரிமை உண்டு, எனக்கு இல்லையா? ஈப்போவில் பிறந்த இளைஞர் நீதிமன்றத்தில் ஆவேசக் கேள்வி


