பெத்தாலிங் ஜெயா,ஜன.9
ஆடவர் ஒருவர் காரில் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நேற்று திங்கட்கிழமை இரவு 8.40 மணியளவில் பெட்டாலிங் ஜெயா, டமான்சாரா பெர்டானா வீடமைப்புப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த காரில் அந்த ஆடவர் இறந்து கிடந்தது தெரியவந்ததாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முஹமாட் ஃபக்ருடின் அப்துல் ஹமிட் தெரிவித்தார்.
49 வயதுடைய அந்த நபரின் இறப்பை திடீர் மரணம் என்று போலீசார் வகைப்படுத்தியுள்ளனர். சவப்பரிசோதனைக்காக சடலம், சுங்கை பூலோ மருத்துவமனையின் சவக்கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டதாக ஏசிபி ஃபக்ருடின் குறிப்பிட்டார்.








