பேசுட் , ஜூலை 15-
தனது 14 வயது பேத்தியை பாலியல் பலாத்காரம் புரிந்ததாக வளர்ப்புத் தாத்தா ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
50 வயது மதிக்கத்தக்க அந்த வளர்ப்பு தாத்தா, புலன் விசாரணைக்கு ஏதுவாக இன்று திரெங்கானு, பேசுட் மாவட்ட நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு, தடுப்புக் காவலுக்கான அனுமதியை போலீசார் பெற்றுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற போலீஸ் புகாரைத் தொடர்ந்து நேற்று இரவு 10 மணியளவில் அந்த நபர் கைது செய்யப்பட்டதாக பேசுட் மாவட்ட போலீஸ் தலைவர் கண்காணிப்பாளர் அப்துல் ரசாக் முஹம்மது தெரிவித்துள்ளார்.








