Jun 6, 2026
Thisaigal NewsYouTube
மாணவர்களுக்கான 100 ரிங்கிட் 'புக்கு மடானி' திட்டம் தொடரும் - அன்வார் அறிவிப்பு
தற்போதைய செய்திகள்

மாணவர்களுக்கான 100 ரிங்கிட் 'புக்கு மடானி' திட்டம் தொடரும் - அன்வார் அறிவிப்பு

Share:

நாடெங்கிலும் பள்ளி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 100 ரிங்கிட் மதிப்பிலான புகு மதானி புத்தக வவுச்சர் திட்டமானது தொடர்ந்து செயல்படுத்தப்படும் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.

இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற கோலாலம்பூர் சர்வதேச புத்தகக் கண்காட்சி தொடக்க விழாவில் உரையாற்றிய அன்வார், இந்த உதவியானது, புத்தகங்கள் வாங்கும் போது தள்ளுபடி முறையின் கீழ் நேரடியாக வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், நாடு நிதி சவால்களை எதிர்கொண்டு வரும் சூழ்நிலையிலும், கல்வி மற்றும் வாசிப்பு பழக்கத்திற்கு அரசாங்கம் தொடர்ந்து முன்னுரிமை அளித்து வருவதாகவும் அன்வார் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளையில், அறிவார்ந்த மற்றும் நாகரிகமான சமூகத்தை உருவாக்க இந்த உதவித் திட்டம் அவசியமானது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்நாட்டை அறிவும், கற்றலும் நிறைந்த நாகரிகமான நாடாக மாற்ற வேண்டுமெனில், வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும் என்றும் அன்வார் தெரிவித்துள்ளார்.

அதேவேளையில், இந்த 100 ரிங்கிட்டானது புத்தகங்கள் வாங்குவதற்காகப் பயன்படுத்தப்படுகின்றதா என்பதை பெற்றோரும் கவனிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related News

காட்டில் உயிருக்குப் போராடிய 14 நாட்கள்: மீட்கப்பட்ட மலையேற்ற வீராங்கனை உருக்கம்

காட்டில் உயிருக்குப் போராடிய 14 நாட்கள்: மீட்கப்பட்ட மலையேற்ற வீராங்கனை உருக்கம்

நெகிரி செம்பிலான் பாரம்பரியச் சிக்கல்: நீதிமன்றம் செல்லாமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும்

நெகிரி செம்பிலான் பாரம்பரியச் சிக்கல்: நீதிமன்றம் செல்லாமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும்

ஜோகூர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் மோதலைத் தவிர்த்து ஒன்றிணைய வேண்டும் – மூடா அழைப்பு

ஜோகூர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் மோதலைத் தவிர்த்து ஒன்றிணைய வேண்டும் – மூடா அழைப்பு

சிரம்பான், தாமான் துவாங்கு ஜாஃபர் ஸ்ரீ மகா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

சிரம்பான், தாமான் துவாங்கு ஜாஃபர் ஸ்ரீ மகா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

தொழில்நுட்பக் கோளாறு: கேஎல்ஐஏ  ரயில் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தம்

தொழில்நுட்பக் கோளாறு: கேஎல்ஐஏ ரயில் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தம்

 14 நாட்களாகக் காட்டில் தவித்த பெண் மலையேறி 'ஜாஸ்லிந்தா' பூர்வக்குடி மக்களால் பத்திரமாக மீட்பு

14 நாட்களாகக் காட்டில் தவித்த பெண் மலையேறி 'ஜாஸ்லிந்தா' பூர்வக்குடி மக்களால் பத்திரமாக மீட்பு

மாணவர்களுக்கான 100 ரிங்கிட் 'புக்கு மடானி' திட்டம் தொடரும... | Thisaigal News