சையிட் சாடிக் அப்துல் ரஹ்மான் தலைமையிலான மூடா கட்சியை ஓர் உறுப்புக்கட்சியாக ஏற்றுக்கொள்ளப்படுமானால் அது பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக்குக் கூடுதல் மதிப்பைக் கொண்டு வந்து விடாது என்று கூறப்பட்டாலும் அந்தக் கூட்டணிக்கு விசுவாசமான ஓர் அரசியல் சகாவாக மூடா தொடர்ந்து இருக்கும் என்று அக்கட்சியின் சிலாங்கூர் மாநில தகவல் பிரிவின் துணைத் தலைவரான எர்னஸ்த் தான் யோங் கூறியுள்ளார்.
மூடா கட்சிக்கு எதிராக கூறப்படும் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த எர்னஸ்த் தான் யோங் , மூடா கட்சிக்கு எந்தப் பதவியும் வழங்கப்படாவிட்டாலும் ஒற்றுமை அரசாங்கத்திற்கு மூடா தனது பிளவுப்படாத ஆதரவை வழங்கி வரும் என்று பி.கே.ஆர். கட்சியின் சிலாங்கூர் மாநில தகவல் பிரிவு துணைத் தலைவர் ஃபௌஸி ஃபட்ஸீலுக்கு நினைவூட்டினார்.
மூடா கட்சி, கூடுதல் மதிப்பைக் கொண்டு வராது அல்லது பக்காத்தான் ஹராப்பான் செல்வாக்கில் நாங்கள் சவாரி செய்கிறோம் என்று யாராவது கூறினால் அது உண்மையிலேயே ஏமாற்றம் அளிக்கிறது. மூடாவைப் பொறுத்தவரையில் மலேசியாவில் நமது அரசியல் சேவை, அரசியல் மதிப்பு மற்றும் அரசியல் கொள்கைகள் ஆகியவற்றில் எங்களின் பேராட்டாங்களும், முன்னெடுப்புகளும் தொடரும் என்று எர்னஸ்த் தான் யோங் தெரிவித்தார்.
குறிப்பாக, பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தொடர்பான பிரச்னைகளுக்குக் குரல் எழுப்புவதிலும் அதற்கு தீர்வு காண்பதிலும் மூடா தலைவர்கள் உறுதி பூண்டு இருப்பதை எர்னஸ்த் தான் யோங் சுட்டிக்காட்டினார்.

Related News

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது


