பினாங்கு,ஆ௧ஸ்ட் 04-
NENGGIRI மாநிலச் சட்டமன்ற இடைத்தேர்தலில் பாஸ் சின்னத்தைப் பயன்படுத்தி போட்டியிடும் கூட்டணி வேட்பாளர் குறைந்தது இரண்டாயிரம் பெரும்பான்மை வாக்குகளுடன் வெற்றி பெறுவார் என்று PERIKATAN NASIONAL -லின் தேர்தல் தலைமை இயக்குநர் DATUK SERI MUHAMMAD SANUSI MD NOR நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி, பினாங்கு, சுங்கை பாக்காப் இடைத்தேர்தலில் தமது கட்சிக்கு மக்களின் ஆதரவு கூடுதலாக இருந்ததால், இம்முறையும் அந்த ஆதரவு கிடைக்கும் என்று அவர் கூறினார்.
மேலும், NENGGIRI மாநிலச் சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு ORANG ASLI இன மக்கள் வாழும் உட்புறப் பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்வதற்கான களத்தில் PERIKATAN NASIONAL களமிறங்கியுள்ளதாக DATUK SERI MUHAMMAD SANUSI தெரிவித்தார்.








