மோட்டார் சைக்கிளோட்டிகளுக்கான பி2 லைசென்ஸின் தரம் "பி" ஆக உயர்த்தப்படுவது குறித்து போக்குவரத்து அமைச்சு ஆராய்வதற்கான பரிந்துரை முன்வைக்கப்படும் என்று துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார். இந்த பரிந்துரையை போக்குவரத்து அமைச்சு அங்கீரிக்குமானால் பி2 லைசென்ஸ் வைத்திருக்கும் மோட்டார் சைக்கிளோட்டிகள் "பி" லைசென்ஸை இயல்பாகவே பெற்று விடுவார்கள் என்று அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக்குடன் தாம் கலந்து ஆலோசிக்கப் போவதாக அகமட் ஜாஹிட் குறிப்பிட்டார். பி2 லைசென்ஸ் வைத்திருக்கும் மோட்டார் சைக்கிள் ஓட்டிகள் 250 சி.சி.க்கும் குறைவான வேக சக்தியைக் கொண்ட மோட்டார் சைக்கிள்களை மட்டுமே பயன்படுத்த அனுமதி அளிக்கப்படுகிறது.
"பி" லைசென்ஸ் வைத்திருப்பவர்கள் 500 சி.சி. வரை வேக சக்தியைக் கொண்ட மோட்டர் சைக்கிள்களை ஓட்டுவதற்கு அனுமதி வழங்கப்படுகிறது. மோட்டார் சைக்கிளோட்டிகளைப் பொறுத்தவரை இந்த சி.சி. வேறுபாட்டில் பெரும் வித்தியாசம் இல்லை என்று அகமட் ஜாஹிட் குறிப்பிட்டார்.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி


