மோட்டார் சைக்கிளோட்டிகளுக்கான பி2 லைசென்ஸின் தரம் "பி" ஆக உயர்த்தப்படுவது குறித்து போக்குவரத்து அமைச்சு ஆராய்வதற்கான பரிந்துரை முன்வைக்கப்படும் என்று துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார். இந்த பரிந்துரையை போக்குவரத்து அமைச்சு அங்கீரிக்குமானால் பி2 லைசென்ஸ் வைத்திருக்கும் மோட்டார் சைக்கிளோட்டிகள் "பி" லைசென்ஸை இயல்பாகவே பெற்று விடுவார்கள் என்று அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக்குடன் தாம் கலந்து ஆலோசிக்கப் போவதாக அகமட் ஜாஹிட் குறிப்பிட்டார். பி2 லைசென்ஸ் வைத்திருக்கும் மோட்டார் சைக்கிள் ஓட்டிகள் 250 சி.சி.க்கும் குறைவான வேக சக்தியைக் கொண்ட மோட்டார் சைக்கிள்களை மட்டுமே பயன்படுத்த அனுமதி அளிக்கப்படுகிறது.
"பி" லைசென்ஸ் வைத்திருப்பவர்கள் 500 சி.சி. வரை வேக சக்தியைக் கொண்ட மோட்டர் சைக்கிள்களை ஓட்டுவதற்கு அனுமதி வழங்கப்படுகிறது. மோட்டார் சைக்கிளோட்டிகளைப் பொறுத்தவரை இந்த சி.சி. வேறுபாட்டில் பெரும் வித்தியாசம் இல்லை என்று அகமட் ஜாஹிட் குறிப்பிட்டார்.

Related News

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

சுங்கை ரொம்பின் ஆற்றில் கணவன் மனைவி இறந்து கிடந்தனர்

முதியவர் மாடி வீட்டிலிருந்து கீழே விழுந்து மரணம்

ஓரினப்புணர்ச்சி நடவடிக்கை: போலீசார் விதிமுறையை மீறவில்லை

பெட்ரோல் ரோன் 97, 3 காசு உயர்வு


