கிளந்தான், தும்பாட்-ட்டில் மாற்றியமைக்கப்பட்ட வாகனங்களில் பெட்ரோலைக் கடத்திய இருவரை, அம்மாநில உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கை செலவீனம் மீதான அமைச்சு கைது செய்தது.
நேற்று திங்கள்கிழமை காலை மணி 9.30 அளவில், TUMPAT-ட்டிலுள்ள ஓர் எண்ணெய் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதணையில், 40 வயதுதக்க ஆடவரும் 20 வயதுதக்க இளைஞரும் தனித்தனியாக சிக்கினர்.
அவ்விருவரிடமிருந்து, பெட்ரோல் திருட்டு நடவடிக்கைக்காக மாற்றியமைக்கப்பட்டிருந்த இரு புரோத்தோன் சாகா இஸ்வரா வாகனங்களும் 125 லிட்டர் பெட்ரோலும் பறிமுதல் செய்யப்பட்டன.
1961ஆண்டு விநியோக கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ், அவ்விருவரிடம் விசாரணை மேற்கொள்ளப்படுவதாக, கிளந்தான்-னுக்கான உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கை செலவீன மீதான அமைச்சின் இயக்குநர் அஸ்மான் இஸ்மாயில் தெரிவித்தார்.








