May 23, 2026
Thisaigal NewsYouTube
ஜூன் 1 முதல் ஜீப் மற்றும் பிக்கப் வாகனங்களுக்கும் டீசல் மானியம் விரிவுபடுத்தப்பட்டது
தற்போதைய செய்திகள்

ஜூன் 1 முதல் ஜீப் மற்றும் பிக்கப் வாகனங்களுக்கும் டீசல் மானியம் விரிவுபடுத்தப்பட்டது

Share:

நாடெங்கிலும், தரைவழி சரக்கு போக்குவரத்துத் துறையைச் சேர்ந்த ஜீப்புகள் மற்றும் பிக்கப் லாரிகளையும் உள்ளடக்கும் வகையில், டீசல் மானியம் வழங்கும் முறையை மேம்படுத்த அரசாங்கம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

அதன்படி, மானிய டீசல் கட்டுப்பாட்டு அமைப்பான SKDS-இன் கீழ், ஜீப் மற்றும் பிக்கப் வாகனங்களையும் தகுதிப்பட்டியலில் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த புதிய நடைமுறையானது, வரும் ஜூன் 1 முதல் நாடு முழுவதும் அமலுக்கு வரும் என உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சர் அர்மிசான் முகமது அலிதெரிவித்துள்ளார்.

மேலும், இந்த முடிவானது, கடந்த மே 20-ஆம் தேதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, இவ்வகை வாகனங்களுக்கு கேமரன் மலைப் பகுதியில் மட்டும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், வரும் ஜூன் 1-ஆம் தேதி முதல், நாடு முழுவதும் தரை வழி சரக்கு போக்குவரத்து துறையில் இயங்கி வரும் ஜீப் அல்லது பிக்கப் வாகனங்களை வைத்திருக்கும் நிறுவனங்கள், SKDS திட்டத்தில் பதிவு செய்ய விண்ணப்பிக்கலாம் என்று அர்மிசான் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

Related News

நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டால் பெர்லிஸ் சட்டமன்றம் கலைக்கப்படும்  / மந்திரி பெசார் அபு பக்கர் ஹம்சா எச்சரிக்கை

நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டால் பெர்லிஸ் சட்டமன்றம் கலைக்கப்படும் / மந்திரி பெசார் அபு பக்கர் ஹம்சா எச்சரிக்கை

ஓப்ஸ் ஹரி ராயா ஐடில்அதா ட்ரோன் கண்காணிப்பை அதிகரிக்கிறது ஜேபிஜே

ஓப்ஸ் ஹரி ராயா ஐடில்அதா ட்ரோன் கண்காணிப்பை அதிகரிக்கிறது ஜேபிஜே

செராஸ் கொலை வழக்கு: மூன்று பேர் மீது நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு

செராஸ் கொலை வழக்கு: மூன்று பேர் மீது நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு

சமூக ஊடகவாசிக்கு எதிரான அவதூறு வழக்கு: ராயருக்கு 1 லட்சம் ரிங்கிட் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

சமூக ஊடகவாசிக்கு எதிரான அவதூறு வழக்கு: ராயருக்கு 1 லட்சம் ரிங்கிட் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

காராக் நெடுஞ்சாலை விபத்து: இறந்த மாணவர்களில் ஒருவர் பிரபல வழக்கறிஞரின் மகன்

காராக் நெடுஞ்சாலை விபத்து: இறந்த மாணவர்களில் ஒருவர் பிரபல வழக்கறிஞரின் மகன்

ஜோகூர் மெர்சிங்கில் 9 வயது மாணவரிடம் பாலியல் சீண்டல் - ஆசிரியர் கைது

ஜோகூர் மெர்சிங்கில் 9 வயது மாணவரிடம் பாலியல் சீண்டல் - ஆசிரியர் கைது