நாடெங்கிலும், தரைவழி சரக்கு போக்குவரத்துத் துறையைச் சேர்ந்த ஜீப்புகள் மற்றும் பிக்கப் லாரிகளையும் உள்ளடக்கும் வகையில், டீசல் மானியம் வழங்கும் முறையை மேம்படுத்த அரசாங்கம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
அதன்படி, மானிய டீசல் கட்டுப்பாட்டு அமைப்பான SKDS-இன் கீழ், ஜீப் மற்றும் பிக்கப் வாகனங்களையும் தகுதிப்பட்டியலில் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த புதிய நடைமுறையானது, வரும் ஜூன் 1 முதல் நாடு முழுவதும் அமலுக்கு வரும் என உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சர் அர்மிசான் முகமது அலிதெரிவித்துள்ளார்.
மேலும், இந்த முடிவானது, கடந்த மே 20-ஆம் தேதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, இவ்வகை வாகனங்களுக்கு கேமரன் மலைப் பகுதியில் மட்டும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், வரும் ஜூன் 1-ஆம் தேதி முதல், நாடு முழுவதும் தரை வழி சரக்கு போக்குவரத்து துறையில் இயங்கி வரும் ஜீப் அல்லது பிக்கப் வாகனங்களை வைத்திருக்கும் நிறுவனங்கள், SKDS திட்டத்தில் பதிவு செய்ய விண்ணப்பிக்கலாம் என்று அர்மிசான் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.








