ஷா ஆலாம் புஞ்சாக் ஆலாம், பகுதியில் உணவு விநியோக ஓட்டுநர் ஒருவர் மரணமடைந்த விபத்து தொடர்பான வழக்கில், வங்காளதேச நாட்டைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளி மீது ஷா ஆலாம் மாஜிஸ்திரே நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜூலை 21-ஆம் தேதி இரவு, ஜாலான் பெர்சியாரான் மோக்தார் தகாரி சாலையில் உணவு விநியோக ஓட்டுநர் தனது மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றுகொண்டிருந்தபோது, பின்னால் வந்த கார் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதாகக் கூறrப் படும் இச்சம்பவம் தொடர்பாகக் கைதான 28 வயது ஹபிபுல்லா குற்றச்சாட்டை மறுத்துள்ள நிலையில், நீதிமன்றம் அவருக்கு 15,000 ரிங்கிட் பிணை வழங்கி வழக்கின் அடுத்த விசாரணையைச் செப்டம்பர் 21-ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது.









