அரசியல் கருத்து வேறுபாடுகளினால் மலாய்க்காரர்கல் மத்தியில் பிளவுகளும், பேதங்களும் ஏற்படுமானால் இந்நாட்டில் முஸ்லீம்கள் தொடர்ந்து பலவீனம் அடைவார்கள் என்று மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷராபுடீன் இட்ரிஸ் ஷா கவலை தெரிவித்துள்ளார்.
மலாய்க்காரர்கள் மத்தியில் ஒற்றுமை என்ற வலைப்பந்தில் சேதம் ஏற்பாடுமானால் தனது சொந்த நாட்டிலேயே ஓர் ஒதுக்கப்பட்ட சமூகமாக பின்தங்கிய நிலையில் தங்களின் அதிகாரத்தை இழக்க நேரிடும் என்பதையும் சுல்தான் வலியுறுத்தினார்.
இதற்கு மேற்காசிய நாடுகளில் நிகழ்ந்த சில சம்பவங்கள் நம் கண்முன் நிழாடுகின்றன. அதேபோன்று பழம் பெருமைக்கும் , கீர்த்திக்கும், வீரத்திற்கும் புகழ் செறிந்த மலாக்கா மலாய் சாம்ராஜ்யம் வீழ்ச்சியுற்றதையும் சிலாங்கூர் சுல்தான் நினைவுகூர்ந்தார்.
நேற்று சுங்கை ஆயர் தாவார், கம்போங் பாரேட் பாருவில் Masjid Al-Ma'arufiah பள்ளிவாசலை திறந்து வைத்து உரையாற்றுகையில் சுல்தான் ஷராபுடீன் இதனை தெரிவித்தார்.
அரசியல் கருத்து வேறுப்பாட்டினால் மலாய்க்காரர்கள் பிளவுப்பட்டு, பல அணிகளாக பிரிந்து நிற்கின்றனர். இஸ்லாத்தின் இறையாண்மையை பேணவும், மலாய்க்காரர்களின் உரிமைகள் நிலைநாட்டப்படவும் அவர்கள் ஒருமித்த நோக்கத்தையும், கருத்திணக்கத்தையும் கொண்டிருந்த போதிலும் அரசியல் பேதங்களால் அவர்கள் சிதறுண்டு இருப்பது, மேன்மைமிகுந்த ஒரு சமூகத்தின் வரலாற்றை திரும்பி பார்க்க வைக்கிறது என்பதுடன் அதனை ஒரு படிப்பிணையாக ஏற்க வேண்டியுள்ளது என்று சுல்தான் ஷராபுடீன் வலியுறுத்தினார்.

Related News

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது


