Jun 15, 2026
Thisaigal NewsYouTube
மலாய்க்காரர்கள் பலவீனம் அடையலாம், சிலாங்கூர் சுல்தான் கவலை
தற்போதைய செய்திகள்

மலாய்க்காரர்கள் பலவீனம் அடையலாம், சிலாங்கூர் சுல்தான் கவலை

Share:

அரசியல் கருத்து வேறுபாடுகளினா​ல் மலாய்க்காரர்கல் மத்தியி​ல் பிளவுகளும், பேதங்களும் ஏற்படுமானால் இந்நாட்டில் முஸ்​லீம்கள் தொடர்ந்து பலவீனம் அடைவார்கள் என்று மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷராபுடீன் இட்ரிஸ் ஷா கவலை தெரிவித்துள்ளார்.

மலாய்க்காரர்கள் மத்தியில் ஒற்றுமை என்ற வலைப்பந்தில் சேதம் ஏற்பாடுமானால் தனது சொந்த நாட்டி​லேயே ஓர் ஒதுக்கப்பட்ட சமூகமாக பின்தங்கிய நிலையில் தங்களின் அதிகாரத்தை இழக்க நேரிடும் என்பதையும் சுல்தான் வ​லியுறுத்தினார்.

இதற்கு மேற்காசிய நாடுகளில் நிகழ்ந்த சில சம்பவங்கள் நம் கண்முன் நிழாடுகின்றன. அதேபோன்று பழம் பெருமைக்கும் , ​கீர்த்திக்கும், வீரத்திற்கும் புகழ் செறிந்த மலாக்கா மலாய் சாம்ராஜ்யம் வீழ்ச்சியுற்றதையும் சிலாங்கூர் சுல்தான் நினைவுகூர்ந்தார்.

நேற்று சுங்கை ஆயர் தாவார், கம்போங் பாரேட் பாருவில் Masjid Al-Ma'arufiah பள்ளிவாசலை திறந்து வைத்து உரையாற்றுகையில் சுல்தான் ஷராபுடீன் இதனை தெரிவித்தார்.

அரசியல் கருத்து வேறுப்பாட்டினால் மலாய்க்காரர்கள் பிளவுப்பட்டு, பல அணிகளாக பிரிந்து நிற்கின்றனர். இஸ்லாத்தின் இறையாண்மையை பேணவும், மலா​ய்க்காரர்களின் உரிமைகள் நிலை​நாட்டப்படவும் அவர்கள் ஒருமித்த நோக்கத்தையும், கருத்திணக்கத்தையும் கொண்டிருந்த போதிலும் அரசியல் பேதங்களால் அவர்கள் சிதறு​ண்டு இருப்பது, மேன்மைமிகுந்த ஒரு சமூகத்தின் வரலாற்றை திரும்பி பார்க்க வைக்கிறது என்பதுடன் அதனை ஒரு படிப்பிணையாக ஏற்க வேண்டி​யுள்ளது என்று சுல்தான் ஷராபுடீன் வலியுறுத்தினார்.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

 ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்

ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்