அரசியல் கருத்து வேறுபாடுகளினால் மலாய்க்காரர்கல் மத்தியில் பிளவுகளும், பேதங்களும் ஏற்படுமானால் இந்நாட்டில் முஸ்லீம்கள் தொடர்ந்து பலவீனம் அடைவார்கள் என்று மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷராபுடீன் இட்ரிஸ் ஷா கவலை தெரிவித்துள்ளார்.
மலாய்க்காரர்கள் மத்தியில் ஒற்றுமை என்ற வலைப்பந்தில் சேதம் ஏற்பாடுமானால் தனது சொந்த நாட்டிலேயே ஓர் ஒதுக்கப்பட்ட சமூகமாக பின்தங்கிய நிலையில் தங்களின் அதிகாரத்தை இழக்க நேரிடும் என்பதையும் சுல்தான் வலியுறுத்தினார்.
இதற்கு மேற்காசிய நாடுகளில் நிகழ்ந்த சில சம்பவங்கள் நம் கண்முன் நிழாடுகின்றன. அதேபோன்று பழம் பெருமைக்கும் , கீர்த்திக்கும், வீரத்திற்கும் புகழ் செறிந்த மலாக்கா மலாய் சாம்ராஜ்யம் வீழ்ச்சியுற்றதையும் சிலாங்கூர் சுல்தான் நினைவுகூர்ந்தார்.
நேற்று சுங்கை ஆயர் தாவார், கம்போங் பாரேட் பாருவில் Masjid Al-Ma'arufiah பள்ளிவாசலை திறந்து வைத்து உரையாற்றுகையில் சுல்தான் ஷராபுடீன் இதனை தெரிவித்தார்.
அரசியல் கருத்து வேறுப்பாட்டினால் மலாய்க்காரர்கள் பிளவுப்பட்டு, பல அணிகளாக பிரிந்து நிற்கின்றனர். இஸ்லாத்தின் இறையாண்மையை பேணவும், மலாய்க்காரர்களின் உரிமைகள் நிலைநாட்டப்படவும் அவர்கள் ஒருமித்த நோக்கத்தையும், கருத்திணக்கத்தையும் கொண்டிருந்த போதிலும் அரசியல் பேதங்களால் அவர்கள் சிதறுண்டு இருப்பது, மேன்மைமிகுந்த ஒரு சமூகத்தின் வரலாற்றை திரும்பி பார்க்க வைக்கிறது என்பதுடன் அதனை ஒரு படிப்பிணையாக ஏற்க வேண்டியுள்ளது என்று சுல்தான் ஷராபுடீன் வலியுறுத்தினார்.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்


