Jun 27, 2026
Thisaigal NewsYouTube
கர்ப்பிணி மனைவியைத் தாக்கிய வழக்கு: வர்த்தகருக்கு 14 ஆண்டுகள் சிறை
தற்போதைய செய்திகள்

கர்ப்பிணி மனைவியைத் தாக்கிய வழக்கு: வர்த்தகருக்கு 14 ஆண்டுகள் சிறை

Share:

தனது முன்னாள் கர்ப்பிணி மனைவியை கடுமையாக தாக்கி, அவரை ஐந்து ஆண்டுகள் கோமா நிலையில் வைத்த வழக்கில் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்ட வர்த்தகர் ஒருவருக்கு, புத்ராஜெயா அப்பீல் நீதிமன்றம் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

அரசு தரப்பின், தண்டனை அதிகரிப்பு கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், இந்தத் தீர்ப்பை இன்று வழங்கியது.

நீதிபதி அஸ்மான் அப்துல்லா தலைமையிலான மூன்று பேர் கொண்ட அமர்வு, 43 வயதான ரோஸ்மைனி அப்துல் ரவூப், ஜாஹிடா நார்டின் குடும்பத்துக்கு 25,000 ரிங்கிட் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.

அந்தத் தொகையை செலுத்தத் தவறினால் கூடுதலாக ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும், குற்றவியல் தீர்ப்புக்கு எதிராக ரோஸ்மைனி தாக்கல் செய்த மேல்முறையீடும் நிராகரிக்கப்பட்டது.

இந்த வழக்கு நாட்டில் பெரும் கவனம் பெற்ற குடும்ப வன்முறை சம்பவங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

Related News

லாபுவான் விமான நிலைய  ஓடுதளத்தில் வெடிகுண்டுகள் கண்டெடுப்பு: தற்காலிகமாக மூடப்பட்டதால் விமானச் சேவைகள் பாதிப்பு

லாபுவான் விமான நிலைய ஓடுதளத்தில் வெடிகுண்டுகள் கண்டெடுப்பு: தற்காலிகமாக மூடப்பட்டதால் விமானச் சேவைகள் பாதிப்பு

ஜெலுத்தோங்  ஆலயத் தாக்குதல்: மணமகன் உட்பட நால்வருக்குப் பிணை மறுப்பு

ஜெலுத்தோங் ஆலயத் தாக்குதல்: மணமகன் உட்பட நால்வருக்குப் பிணை மறுப்பு

63 வாக்குறுதிகள், 2 லட்சம் வேலைவாய்ப்புகள் –  ஜோகூர் பாரிசான் நேஷனலின் அதிரடி தேர்தல் அறிக்கை

63 வாக்குறுதிகள், 2 லட்சம் வேலைவாய்ப்புகள் – ஜோகூர் பாரிசான் நேஷனலின் அதிரடி தேர்தல் அறிக்கை

அகம்பாவம் இன்றி, கண்ணியத்துடன் பிரச்சாரம் செய்யுங்கள்" –  ஜோகூர் தேர்தல் வேட்பாளர்களுக்கு பிரதமர் அன்வார் அறிவுறுத்து

அகம்பாவம் இன்றி, கண்ணியத்துடன் பிரச்சாரம் செய்யுங்கள்" – ஜோகூர் தேர்தல் வேட்பாளர்களுக்கு பிரதமர் அன்வார் அறிவுறுத்து

சிலாங்கூர் சுல்தானின் சகோதரி தெங்கு புத்ரி அராபியா காலமானார்

சிலாங்கூர் சுல்தானின் சகோதரி தெங்கு புத்ரி அராபியா காலமானார்

ஸ்கூடாய் தொகுதியில் பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளராக கார்த்தியாயினி ஜெயபாலன் களம் இறங்குகிறார்

ஸ்கூடாய் தொகுதியில் பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளராக கார்த்தியாயினி ஜெயபாலன் களம் இறங்குகிறார்