"ஜோகூரின் முன்னேற்றம், நிலைப்பெறும் நிலைத்தன்மை, தொடரும் வளர்ச்சி" எனும் கருப்பொருளின் கீழ், ஜோகூர் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான 63 வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை பாரிசான் நேஷனல் கூட்டணி இன்று வெளியிட்டுள்ளது.
மாநிலத்தின் நிலைத்தன்மையையும், வளர்ச்சியையும் மையமாகக் கொண்டு 6 முக்கிய அம்சங்களின் கீழ் இந்த தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் 2 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் சொந்த நிலத்தில் வீடு கட்ட 100 மில்லியன் ரிங்கிட் மானிய நிதி, சிறு வணிகர்களுக்கான முதல் ஆண்டு வணிக உரிமக் கட்டண விலக்கு மற்றும் வட்டி இல்லா மைக்ரோ-ஃபைனான்ஸ் நிதியுதவிகள் ஆகியவை முக்கிய அம்சங்களாக இடம்பெற்றுள்ளன.
கடந்த நான்கு ஆண்டுகால தங்களின் சிறந்த நிர்வாகத் திறனின் அடிப்படையிலேயே இந்த வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளதாக ஜோகூர் பாரிசான் நேஷனல் தலைவர் Datuk Onn Hafiz Ghazi தெரிவித்துள்ளார்.








