ஜோகூர் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் நாளை ஜுன் 27 ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறும் வேளையில் எண். 48, ஸ்கூடாய் தொகுதியில் ஜசெக. சார்பில் பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளராக வழக்கறிஞர் கார்த்தியாயினி ஜெயபாலன் களம் காண்கிறார்.
"ஸ்கூடாயின் மகள், ஸ்கூடாயின் வளர்ச்சிக்கே!" எனும் தாரக மந்திரத்துடன் கார்த்தியாயினி ஜெயபாலன், மக்கள் சேவையில் தீவிரமாகக் களம் இறங்கியுள்ளார்.
ஸ்கூடாய்-இல் பிறந்து ஸ்கூடாய்யிலே கல்வி கற்று வளர்ந்தவரான கார்த்தியாயினி ஜெயபாலன், மலாயாப் பகல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் இளங்கலை பட்டம் பெற்றவர் ஆவார். 2015-ஆம் ஆண்டு மலாயா உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கறிஞராக ஏற்றுக்கொள்ளப்பட்டு, சட்டத்தொழில் புரிந்து வருகிறார். .
2018 முதல் 2020 வரை ஜோகூர் மாநில பயனீட்டாளர், மனித வளம், ஒற்றுமைத்துறை ஆட்சிக்குழு உறுப்பினரின் சிறப்பு அதிகாரியாகவும், 2022 முதல் 2024 வரை பேராக், புந்தோங் சட்டமன்ற உறுப்பினரின் அரசியல் செயலாளராகவும், அண்மையில் பெர்லிங் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தின் தலைமை அதிகாரியாகவும் பணியாற்றிய பரந்த அரசியல் நிர்வாக அனுபவத்தை கார்த்தியாயினி ஜெயபாலன், கொண்டுள்ளார்.
பல்லினச் சமூக அமைப்பில் வளர்ந்த கார்த்தியாயினி ஜெயபாலன், இனம் மற்றும் பின்னணி பாராமல் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப் பாடுபட்டு ள்ளார். ஒவ்வொரு மலேசியப் பிரஜையும் சமமான வாய்ப்புகளும், சிறந்த வாழ்வாதாரமும் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில், அனைவருக்குமான நிலையான மற்றும் உள்ளடக்கிய கொள்கைகளை நோக்கித் தொடர்ந்து பாடுபடப் போவதாக அவர் உறுதியளித்துள்ளார்.








