Mar 14, 2026
Thisaigal NewsYouTube
லோரி மோதி இரு மோட்டார் சைக்கிளோட்டிகள் மரணம்
தற்போதைய செய்திகள்

லோரி மோதி இரு மோட்டார் சைக்கிளோட்டிகள் மரணம்

Share:

லோரி, டிரேலர், பஸ், 2 மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை உட்படுத்திய விபத்தில், 49 மற்றும் 54 வயதுடைய இருவர் உயிரிழந்துள்ளனர்.

ஜோகூர், தஞ்ஞோங் கூப்பாங் டோல் சாவடியில் இன்று அதிகாலை 5.50 மணி அளவில், லோரி ஒன்றின் பிரேக் கோளாறு ஆனதால் கட்டுப்பாட்டை இழந்து டிரேலர், பாஸ் ஆகியவற்றை மோதியதுடன் இரு மோட்டார் சைக்கிள்களையும் அந்த லோரி மோதியது என இஸ்கண்டார் புத்ரி மாவட்டக் காவல் துறைத் தலைவர் ஏசிஸ்தன் கமிஷ்னர் ரஹ்மாட் அரிஃபின் தெரிவித்தார்.

அந்த விபத்தால், சிங்கப்பூருக்கு வேலைக்குச் சென்று கொண்டிருந்த அந்த இரு மோட்டார் சைக்கிளோட்டிகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்

அதே சமயம், லோரி ஓட்டுநருக்கு நெஞ்சு பகுதியில் வலி ஏற்பட்டது எனவும் டிரேலர், பஸ் ஓட்டுநர்களுக்கும் பேருந்தில் பிரயாணம் செய்த 29 பேருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை எனவும் ரஹ்மாட் அரிஃபின் தெரிவித்தார்.
பிரேத பரிசோதனைக்காக இறந்தவர்களின் சடலங்கள் சுல்தானா அமினா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

Related News