கோலாலம்பூர், ஜுலை 13-
எதிர்க்கட்சிகளின் ஆரவாரத்தில் மயங்கிவிட வேண்டாமென அக்மல்லுக்கு அடாம் அட்லீ நினைவுறுத்தினார்.
பெர்சாத்து கட்சியின் 6 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிகளை, மக்களவைத் தலைவர் டான் ஸ்ரீ ஜோஹாரி அப்துல் நிலைநிறுத்தியுள்ள முடிவை கேள்வியெழுப்புவதற்கு முன்பு, அம்னோ இளைஞர் பிரிவு தலைவர் டாக்டர் அக்மல் சலே உண்மைநிலையை அறிந்து பேச வேண்டும்.
அதைவிடுத்து, எதிர்க்கட்சியினர் வாசிக்கும் மகுடிக்கு ஏற்ப நடனமாடக்கூடாது என PKR இளைஞர் பிரிவு தலைவர் அடாம் அட்லீ அப்துல் ஹலிம் நினைவுறுத்தினார்.
சம்பந்தப்பட்ட விவகாரத்தில், ஒற்றுமை அரசாங்கத்தின் தரப்பில் நின்று பேசவேண்டுமே தவிர, அரசாங்கத்தைப் பாதிக்கும் வகையில் அவர் விமர்சிக்கக்கூடாது.
கிளந்தான் நெங்கிரி சட்டமன்றம் காலியானதாக அறிவிக்கப்பட்டதற்காக, நாடாளுமன்றத்திலும் அந்த 6 நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதிகளை காலியானதாக அறிவிக்க வேண்டியதில்லைஎன அடாம் அட்லீ கூறினார்.








