மனித வள அமைச்சர் வி. சிவக்குமாரின் இரண்டு முக்கிய அதிகாரிகள் லஞ்ச ஊழல் ஆணையத்தினால் கைது செய்யப்பட்டிருப்பது, பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கம், முழு வீச்சில் லஞ்ச ஊழலை வேரறுக்கும் கடப்பாட்டைக் கொண்டிருக்கிறது என்பதை பிரதிபலிக்கிறது என்று தொடர்புத் துறை மற்றும் இலக்கவியல் அமைச்சர் ஃபாமி ஃபட்ஸில் தெரிவித்துள்ளார்.
லஞ்ச ஊழலில், யார் ஈடுப்பட்டிருந்தாலும், அவர்களுக்கு எதிராக லஞ்ச ஊழல் தடுப்புச் சட்டம் பாயும் என்பதையே இந்நடவடிக்கை காட்டுவதாக ஃபாமி ஃபட்ஸில் குறிப்பிட்டார்.
சம்பந்தப்பட்டவர் நடப்பு அரசாங்கத்தில் ஓர் அங்கமாக வீற்றிருந்த போதிலும், பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்பதே மடானி அரசாங்கத்தின் கொள்கையாகும் என்று ஃபாமி ஃபட்ஸில் விளக்கினார்.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்


