மனித வள அமைச்சர் வி. சிவக்குமாரின் இரண்டு முக்கிய அதிகாரிகள் லஞ்ச ஊழல் ஆணையத்தினால் கைது செய்யப்பட்டிருப்பது, பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கம், முழு வீச்சில் லஞ்ச ஊழலை வேரறுக்கும் கடப்பாட்டைக் கொண்டிருக்கிறது என்பதை பிரதிபலிக்கிறது என்று தொடர்புத் துறை மற்றும் இலக்கவியல் அமைச்சர் ஃபாமி ஃபட்ஸில் தெரிவித்துள்ளார்.
லஞ்ச ஊழலில், யார் ஈடுப்பட்டிருந்தாலும், அவர்களுக்கு எதிராக லஞ்ச ஊழல் தடுப்புச் சட்டம் பாயும் என்பதையே இந்நடவடிக்கை காட்டுவதாக ஃபாமி ஃபட்ஸில் குறிப்பிட்டார்.
சம்பந்தப்பட்டவர் நடப்பு அரசாங்கத்தில் ஓர் அங்கமாக வீற்றிருந்த போதிலும், பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்பதே மடானி அரசாங்கத்தின் கொள்கையாகும் என்று ஃபாமி ஃபட்ஸில் விளக்கினார்.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்


