மனித வள அமைச்சர் வி. சிவக்குமாரின் இரண்டு முக்கிய அதிகாரிகள் லஞ்ச ஊழல் ஆணையத்தினால் கைது செய்யப்பட்டிருப்பது, பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கம், முழு வீச்சில் லஞ்ச ஊழலை வேரறுக்கும் கடப்பாட்டைக் கொண்டிருக்கிறது என்பதை பிரதிபலிக்கிறது என்று தொடர்புத் துறை மற்றும் இலக்கவியல் அமைச்சர் ஃபாமி ஃபட்ஸில் தெரிவித்துள்ளார்.
லஞ்ச ஊழலில், யார் ஈடுப்பட்டிருந்தாலும், அவர்களுக்கு எதிராக லஞ்ச ஊழல் தடுப்புச் சட்டம் பாயும் என்பதையே இந்நடவடிக்கை காட்டுவதாக ஃபாமி ஃபட்ஸில் குறிப்பிட்டார்.
சம்பந்தப்பட்டவர் நடப்பு அரசாங்கத்தில் ஓர் அங்கமாக வீற்றிருந்த போதிலும், பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்பதே மடானி அரசாங்கத்தின் கொள்கையாகும் என்று ஃபாமி ஃபட்ஸில் விளக்கினார்.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்


