Jun 10, 2026
Thisaigal NewsYouTube
பெர்சாத்துவுடனான கூட்டணி முறிவு: பாஸ் தனது சொந்த சின்னத்தில் போட்டியிடுகின்றது
தற்போதைய செய்திகள்

பெர்சாத்துவுடனான கூட்டணி முறிவு: பாஸ் தனது சொந்த சின்னத்தில் போட்டியிடுகின்றது

Share:

பெர்சாத்து கட்சியுடனான அரசியல் உறவை முறித்துக்கொண்டதைத் தொடர்ந்து புதிய அரசியல் அணிவகுப்பை ஆராய்ந்து வரும் பாஸ் கட்சி, வரவிருக்கும் ஜோகூர் மாநிலத் தேர்தலில் தனது சொந்த சின்னத்தில் போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இது குறித்து ஜோகூர் மாநில பாஸ் கட்சியின் ஆணையர் டத்தோ டாக்டர் மஹ்போட்ஸ் முகமது வெளியிட்டுள்ள தகவலில், தேர்தல் ஒத்துழைப்பு தொடர்பாக பல அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.

என்றாலும், அந்த ஒத்துழைப்பு முறையான கூட்டணியாக இல்லாமல், தேர்தல் உடன்படிக்கை வடிவிலேயே அமையும் என்றும், ஒவ்வொரு கட்சியும் தங்களது சொந்த சின்னத்திலேயே போட்டியிடும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அந்த வகையில், பாஸ் தனது சொந்த சின்னத்தைப் பயன்படுத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், தற்போதைய கால அவகாசத்தை கருத்தில் கொண்டால், புதிய கூட்டணியை அதிகாரப்பூர்வமாக அமைப்பது நடைமுறையில் சாத்தியமில்லை என நேற்று செவ்வாய்க்கிழமை இரவு ஜோகூர் பாஸ் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மஹ்போட்ஸ் முகமது தெரிவித்துள்ளார்.

Related News

உலகளாவிய பிரச்சினைகளுக்குக் காரணம் அதிகாரப் பற்றாக்குறை அல்ல; தலைமைத்துவக் குழப்பம் / ஜப்பான் கருத்தரங்கில் அன்வார் வலியுறுத்தல்

உலகளாவிய பிரச்சினைகளுக்குக் காரணம் அதிகாரப் பற்றாக்குறை அல்ல; தலைமைத்துவக் குழப்பம் / ஜப்பான் கருத்தரங்கில் அன்வார் வலியுறுத்தல்

கேஎல்ஐஏ-வில் 6 ஜிப்பான் குரங்குகளை உயிருடன் விமானத்தில் கடத்த முயன்ற நபர் கைது

கேஎல்ஐஏ-வில் 6 ஜிப்பான் குரங்குகளை உயிருடன் விமானத்தில் கடத்த முயன்ற நபர் கைது

சட்டவிரோதமாக சபாவிற்குள் நுழைந்ததாக ஜெர்மன் நாட்டவர் மீது குற்றச்சாட்டு

சட்டவிரோதமாக சபாவிற்குள் நுழைந்ததாக ஜெர்மன் நாட்டவர் மீது குற்றச்சாட்டு

43 நகைகள் தொடர்பாக லெபனான் நிறுவனத்திற்கு 14.6 மில்லியன் டாலர்கள் செலுத்த ரோஸ்மாவுக்கு நீதிமன்றம் உத்தரவு

43 நகைகள் தொடர்பாக லெபனான் நிறுவனத்திற்கு 14.6 மில்லியன் டாலர்கள் செலுத்த ரோஸ்மாவுக்கு நீதிமன்றம் உத்தரவு

ஜஸ்லிந்தா கடத்தப்பட்டதாக அவதூறு: 50 ஓராங் அஸ்லி பிரதிநிதிகள் போலீசில் புகார்

ஜஸ்லிந்தா கடத்தப்பட்டதாக அவதூறு: 50 ஓராங் அஸ்லி பிரதிநிதிகள் போலீசில் புகார்

அனைத்துலக  சமூக நீதி கூட்டணியில் இணைந்தது மலேசியா

அனைத்துலக சமூக நீதி கூட்டணியில் இணைந்தது மலேசியா