Jun 29, 2026
Thisaigal NewsYouTube
பள்ளிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துவீர்: கல்வி அமைச்சு உத்தரவு
தற்போதைய செய்திகள்

பள்ளிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துவீர்: கல்வி அமைச்சு உத்தரவு

Share:

அண்மைகாலமாக பள்ளி மாணவர்கள் கட்டிடங்களிலிருந்து விழுந்து விபத்துக்குள்ளாகும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், பள்ளி நிர்வாகங்கள், பாதுகாப்பு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்த வேண்டும் என கல்வி அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

ஜோகூர் பாருவில் உள்ள ஜாலான் யஹ்யா அவால் தமிழ்ப்பள்ளியில் நடைபெற்ற கல்வி மடானி நிகழ்வில் கலந்துகொண்ட கல்வி அமைச்சர் ஃபத்லினா சிடெக் , செய்தியாளர்களிடம் பேசுகையில், மேற்கண்ட அறைகூவலை விடுத்தார்.

"மாணவர்களின் பாதுகாப்பில் எவ்வித சமரசமும் செய்துகொள்ள முடியாது; பள்ளிகள் புதிய பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளைக் கட்டாயமாகப் பின்பற்ற வேண்டும்" என்று அமைச்சர் திட்டவட்டமாக தெரிவித்தார். மேலும், மாணவர்களின் மனநலனைப் பாதுகாப்பதில் பெற்றோர்களும், ஆசிரியர்களும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

அண்மையில் ஈப்போவில் படிவம் ஒன்று மாணவன் ஒருவன் பள்ளி கட்டிடத்திலிருந்து விழுந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவது, கடந்த வெள்ளிக்கிழமை,சிரம்பான், செண்டாயானில் படிவம் நான்கு மாணவி ஒருவர் விழுந்து உயிரிழந்தது,

ஆகிய சம்பவங்களை மேற்கோள்காட்டி அமைச்சர் ஃபத்லினா சிடெக் மேற்கண்ட அறைகூவலை விடுத்தார்.

இது போன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் நிகழாமல் இருக்கவும், தடுக்கவும் மாணவர்களுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வை தினமும் நினைவூட்ட வேண்டும் என்று பள்ளி நிர்வாகங்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

இந்த கல்வி மடானி நிகழ்வில் கல்வி அமைச்சருடன் மனித வள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் இராமகிருஷ்ணனும் கலந்து கொண்டார்.

Related News

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

  முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு