சுங்கை பூலோ அருகில் எல்மினாவில் 10 பேர் உயிரிழந்த பீச்கிராஃப்ட் 390 பிரீமியர் 1 ரக ஜெட் விமான விபத்தில் நொறுங்கிய பாகங்களை விமான விபத்து புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளும், அமெரிக்காவின் வான் போக்குவரத்து நிபுணர்களும் ஆராயவுள்ளனர். விபத்து நடந்த கத்ரி நெடுஞ்சாலையில் நாளை மறுநாள் திங்கட்கிழமை இந்த ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் நிகழ்ந்த இச்சம்பவத்தில் விமானம் விபத்துக்குள்ளானதற்கான காரணத்தை கண்டு பிடிப்பதற்கு விமானத்தின் சிதைந்தப் பாகங்கள் முக்கிய ஆதாரப் பொருட்களாக பயன்படுத்தப்படும் என்று ஷா ஆலாம் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமது இக்பால் இப்ராகிம் தெரிவித்துள்ளார். இந்த புலனாய்வு முற்றுப்பெறும் வரையில் சம்பவ இடத்தில் 24 மணி நேரமும் காவல் பணியில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று ஏசிபி முகமது இக்பால் குறிப்பிட்டார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது


