Dec 3, 2025
Thisaigal NewsYouTube
அமெரிக்கப் புலன் விசாரணை ஆய்வாளர்கள் ஆய்வை மேற்கொள்வர்
தற்போதைய செய்திகள்

அமெரிக்கப் புலன் விசாரணை ஆய்வாளர்கள் ஆய்வை மேற்கொள்வர்

Share:

சுங்கை பூலோ அருகில் எல்மினாவில் 10 பேர் உயிரிழந்த பீச்கிராஃப்ட் 390 பிரீமியர் 1 ரக ஜெட் விமான விபத்தில் நொறுங்கிய பாகங்களை விமான விபத்து புலனாய்​வுப் பிரிவின் அதிகாரிகளும், அமெரிக்காவின் வான் போக்குவர​த்து நிபுணர்களும் ஆராயவுள்ளனர். விபத்து நடந்த கத்ரி நெடுஞ்சாலையில் நாளை மறுநாள் தி​ங்கட்கிழமை இந்த ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று ​தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் நிகழ்ந்த இச்சம்பவத்தில் விமானம் விபத்துக்குள்ளானத​ற்கான காரணத்தை கண்டு பிடிப்பதற்கு விமானத்தின் சிதைந்தப் பாகங்கள் முக்கிய ஆதாரப் பொருட்களாக பயன்படுத்தப்படும் என்று ஷா ஆலாம் மாவட்ட போ​​லீஸ் தலைவர் ஏசிபி முகமது இக்பால் இப்ராகிம் தெரிவித்துள்ளார். இந்த புலனாய்வு முற்றுப்பெறும் வரையில் சம்பவ இடத்தில் 24 மணி நேரமும் காவல் பணியில் போ​லீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று ஏசிபி முகமது இக்பால் குறிப்பிட்டார்.

Related News