சுங்கை பூலோ அருகில் எல்மினாவில் 10 பேர் உயிரிழந்த பீச்கிராஃப்ட் 390 பிரீமியர் 1 ரக ஜெட் விமான விபத்தில் நொறுங்கிய பாகங்களை விமான விபத்து புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளும், அமெரிக்காவின் வான் போக்குவரத்து நிபுணர்களும் ஆராயவுள்ளனர். விபத்து நடந்த கத்ரி நெடுஞ்சாலையில் நாளை மறுநாள் திங்கட்கிழமை இந்த ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் நிகழ்ந்த இச்சம்பவத்தில் விமானம் விபத்துக்குள்ளானதற்கான காரணத்தை கண்டு பிடிப்பதற்கு விமானத்தின் சிதைந்தப் பாகங்கள் முக்கிய ஆதாரப் பொருட்களாக பயன்படுத்தப்படும் என்று ஷா ஆலாம் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமது இக்பால் இப்ராகிம் தெரிவித்துள்ளார். இந்த புலனாய்வு முற்றுப்பெறும் வரையில் சம்பவ இடத்தில் 24 மணி நேரமும் காவல் பணியில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று ஏசிபி முகமது இக்பால் குறிப்பிட்டார்.

Related News

பழைய மோட்டார் சைக்கிள்களைத் தள்ளுபடி செய்ய ஊக்கத்தொகை ! போக்குவரத்து அமைச்சு பரிசீலனை

நோன்புப் பெருநாள் - கனரக வாகனங்களுக்கு 4 நாட்கள் தடை ! ஜேபிஜே அதிரடி சோதனை

மேற்காசியப் போர் நீடித்தால் எரிசக்தி ஏற்றுமதிக்குத் தடை: இறுதி முடிவாக மலேசியா பரிசீலிக்கும்

காவற்படை சோதனையிலிருந்து தப்பிக்க முயன்ற 17 வயது சிறுவன் விபத்தில் பலி

பெண்களின் உள்ளாடைகளைத் திருடி வந்த நபர் கைது


