மலாய்காரர் அல்லாதவர் பிரதமராக நியமிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகளை குறித்து டி.ஏ.பி-யின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங் சமீபத்தில் கருத்துரைக்கிறார்.
அந்த விவகாரம் குறித்து தற்போது அவர் காவல்துறையிடம் விளக்கமளித்துள்ளார்.
கடந்த மாதம் இங்கிலாந்தில் இருக்கும் மலேசிய மாணவர்களிடம் பேசிய அவர் குறிப்பீடுகையில், மலேசிய அரசியல் அமைப்பு சட்டம் என்பது அனைவருக்கும் பொதுவாக செயல்படக்கூடிய சமதளமாக குறிப்பிட்டார்.
மேலும், அமெரிக்க நாட்டை சுட்டிக் காட்டி சிறுபான்மையினர் தரப்பிலிருந்து நாட்டின் தலைவராக குறிப்பாக பிரதமராக ஒருவர் நியமிக்கப்படுவதில் மலேசிய அரசியலமைப்பு சட்டம் வழிவகிக்கிறது.
அமெரிக்காவை சுட்டி காட்டி பேசிய அவர் அந்நாட்டின் முன்னாள் அதிபர் பாராக் ஒபாமா குறிப்பிட்டு 230 ஆண்டுகளுக்கு பிறகே சிறுபான்மை இனத்திலிருந்து ஒருவர் நாட்டின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதை ஒப்பிட்டு மலேசியா அவ்வலவு காலம் காத்திருக்க வேண்டியது இல்லை என்றார்.
இவ்வாறு கருத்துரைத்ததற்கான விளக்கத்தை லிம் கிட் சியாங் கருத்துரைத்தார்.








