Feb 21, 2026
Thisaigal NewsYouTube
லங்காவியில் நீரில் மூழ்கிய சீனச் சுற்றுலாப் பயணியின் உடல் மீட்பு
தற்போதைய செய்திகள்

லங்காவியில் நீரில் மூழ்கிய சீனச் சுற்றுலாப் பயணியின் உடல் மீட்பு

Share:

லங்காவி, பிப்ரவரி.21-

லங்காவி, தஞ்சோங் ரூ கடற்கரையில் நேற்று வெள்ளிக்கிழமை நீந்தச் சென்ற போது நீரில் மூழ்கியதாக அஞ்சப்பட்ட சீன நாட்டவரின் உடல் இன்று சனிக்கிழமை காலை கண்டெடுக்கப்பட்டது.

ஷாங்காயைச் சேர்ந்த 48 வயதான Mingfei Lan என்பவரின் உடலை பொது பாதுகாப்புப் படையினர் காலை 9.45 மணியளவில் மீட்டதாக லங்காவி மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி கைருல் அஸ்ஹார் நுருடின் தெரிவித்தார்.

தனது மனைவி மற்றும் மகனுடன் விடுமுறைக்கு லங்காவிக்கு வந்திருந்த அந்த நபர், மாலை 5.30 மணியளவில் நீந்துவதற்காக பூலாவ் சாபாங் நோக்கித் தனியாகச் சென்றுள்ளார். மாலை 6 மணியளவில் தனது தந்தை இன்னும் கரை திரும்பாததைக் கண்ட அவரது மகன், ஹோட்டல் நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, இரவு 9 மணியளவில் லங்காவி தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தினர் தேடுதல் பணியைத் தொடங்கினர் என்று ஏசிபி கைருல் ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இன்று காலை மீண்டும் தொடங்கப்பட்ட தேடுதல் பணியின் போது, அந்த சீனப் பிரஜை, கடைசியாகக் காணப்பட்ட இடத்திலிருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில், பூலாவ் சாபாங் அருகிலுள்ள நீர் பகுதியில் முகம் குப்புறக் கிடந்த நிலையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.

உடல் பிரேத பரிசோதனைக்காக லங்காவி, சுல்தானா மாலிஹா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

Related News

பினாங்கின் கடல் மதில் மற்றும் நடைபாதை திட்டத்திற்கு யுனெஸ்கோ பாரம்பரிய விருது

பினாங்கின் கடல் மதில் மற்றும் நடைபாதை திட்டத்திற்கு யுனெஸ்கோ பாரம்பரிய விருது

லங்காவி கடலில் மூழ்கியதாக நம்பப்படும் சீன நாட்டவரைத் தேடும் பணி தீவிரம்

லங்காவி கடலில் மூழ்கியதாக நம்பப்படும் சீன நாட்டவரைத் தேடும் பணி தீவிரம்

நிர்வாக முறைகேடுகள் தொடர்பில் HRD Corp-இல் மேலும் மூவர் இடைநீக்கம்

நிர்வாக முறைகேடுகள் தொடர்பில் HRD Corp-இல் மேலும் மூவர் இடைநீக்கம்

ஊழல் புகார்கள் தொடர்பில் ரஃபிஸிக்கு எதிராக முறையாக புகார் அளித்தால் மட்டுமே நடவடிக்கை - பிகேஆர் தகவல்

ஊழல் புகார்கள் தொடர்பில் ரஃபிஸிக்கு எதிராக முறையாக புகார் அளித்தால் மட்டுமே நடவடிக்கை - பிகேஆர் தகவல்

ஆயுதப் படையின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்த வேண்டாம்: மறைந்த இராணுவ வீரர் இந்திரனின் தாயார் வேண்டுகோள்

ஆயுதப் படையின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்த வேண்டாம்: மறைந்த இராணுவ வீரர் இந்திரனின் தாயார் வேண்டுகோள்

கோலா பிலாவில் 80 வயது தாயாரை டின் திறப்பானால் குத்திய மகள் கைது

கோலா பிலாவில் 80 வயது தாயாரை டின் திறப்பானால் குத்திய மகள் கைது