பினாங்கு, பாயான் லெப்பாஸ் பகுதியில் நிர்வாண நிலையில் சுற்றித்திரிந்த நபர் ஒருவர், போலீஸ் துறையினரால் மீட்கப்பட்டு மருத்துவமனையின் மனநலப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த வாரம் ' லெபு புக்கிட் ஜம்புல்' சாலையில் ஆடைகளின்றி ஒருவர் நடமாடுவதாகக் கிடைத்த புகாரைத் தொடர்ந்து, வடகிழக்கு மாவட்ட போலீசார் மற்றும் மருத்துவக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். சாலையின் நடுவே மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் காணப்பட்ட அந்த நபரை மீட்ட போலீசார், பாதுகாப்புடன் பினாங்கு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அந்த நபரிடம் அடையாள ஆவணங்கள் ஏதும் இல்லாததால், அவர் யார் என்பதை அடையாளம் காணவும், அவரது உறவினர்களைக் கண்டறியவும் போலீசார் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது அந்த நபர் மருத்துவமனையின் மனநலப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகத் துணை போலீஸ் சூப்பரின்டென்டென்ட் லீ சுவீ சேக் தெரிவித்துள்ளார்.








