கிளந்தானில் பொது இடத்தில் அரைகால் சிலுவார் அணிந்த குற்றத்திற்காக பெண் வியாபாரி ஒருவருக்கு அபராதம் விதிக்கும் வகையில் சம்மன் வெளியிடப்பட்டது. கிளந்தான், கோத்தா பாருவில் வியாபாரம் செய்து வரும் 35 வயதுடைய அந்தப் பெண், அரைக்கால் சிலுவார் அணிந்து இருந்தது மூலம் நகராண்மைக்கழக விதிமுறைகளை மீறியுள்ளார் என்று கிளந்தான் நகராண்மைக்கழகம் தெரிவித்துள்ளது.
பொது இடங்களில் கால் தொடைகள் தெரியும் அளவிற்கு உடை அணிவதற்கு கிளந்தானில் அனுமதியில்லை. அந்தப் பெண் அணிந்துள்ள ஆடை, ஏற்புடையது அல்ல என்பதால் முஸ்லிம் அல்லாத அந்தப் பெண்ணுக்கு சம்மன் வெளியிடப்பபட்டுள்ளது என்று நகராண்மைக்கழத் தலைவர் ரொஸ்நஸ்லி அமின் தெரிவித்தார்.

Related News

சுங்கை பட்டாணி வன்முறைச் சம்பவங்கள்: 17 வயதுச் சிறுவன் உட்பட 14 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

பெரும் சோகம்: ரம்புத்தான் பழக் கொட்டைத் தொண்டையில் சிக்கி 5 வயது சிறுவன் உயிரிழப்பு

டத்தோ ஸ்ரீ விருது பெற்றுத் தருவதாக லஞ்சம்: முன்னாள் பெண் செய்தியாளர் நீதிமன்றத்தில் மறுப்பு

துன் மகாதீரின் உடல்நலத்தில் முன்னேற்றம்: மருத்துவக் குழுவினர் திருப்தி

5G சேவையில் சிலாங்கூர் முதலிடம்: 96.9 சதவீத இலக்கை எட்டி சாதனை


