Jan 20, 2026
Thisaigal NewsYouTube
சுங்கை பட்டாணி வன்முறைச் சம்பவங்கள்: 17 வயதுச் சிறுவன் உட்பட 14 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

சுங்கை பட்டாணி வன்முறைச் சம்பவங்கள்: 17 வயதுச் சிறுவன் உட்பட 14 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

Share:

சுங்கை பட்டாணி, ஜனவரி.20-

இம்மாதம் கெடா, சுங்கை பட்டாணியில் ஆயுதங்களுடன் நடைபெற்ற இரண்டு தனித்தனி வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக, 17 வயது பையன் மற்றும் ஒரு பெண் உட்பட 14 பேர் மீது இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.

கடந்த ஜனவரி 9-ஆம் தேதி மாலை 4 மணியளவில் பாடாங் தாமான் சுத்தேரா என்ற இடத்தில் கற்கள் மற்றும் தடிகளுடன் கலவரத்தில் ஈடுபட்டதாக 17 வயது சிறுவன் மற்றும் 7 பேர் மீது மாஜிஸ்திரேட் முகமட் அஸ்லான் பஸ்ரி முன்னிலையில் குற்றஞ்சாட்டப்பட்டது.

48 வயது கே. சண்முகம், 19 வயது ஆர். குமாரவேலு, 19 வயது எஸ். அன்புச்செல்வம், 21 வயது எம். சிவக்குமார், 20 வயது எஸ். முனீஸ்வரன், 24 வயது எஸ். தெய்வம் மற்றும் 25 வயது எஸ். தேவகி ஆகியோரே குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் ஆவர். இவர்கள் அனைவரும் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினர். இவர்களுக்கு தலா 3,000 ரிங்கிட் பிணை அனுமதிக்கப்பட்டது.

கடந்த ஜனவரி 10-ஆம் தேதி அதிகாலை 5 மணியளவில் தாமான் சொங்கேட் பகுதியில், தலைக்கவசம், பாராங் கத்தி மற்றும் கார் ஆகியவற்றை ஆயுதங்களாகப் பயன்படுத்தி கலவரத்தில் ஈடுபட்டதாக மேலும் 6 பேர் மீது மற்றொரு நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது. இந்தத் தாக்குதலில் தேவகி மற்றும் தெய்வம் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது.

27 வயது வி. ரிஷிதரன், 27 வயது ஆர். ஹரிஹரன், 28 வயது ஏ. தினேஷ்குமார், 27 வயது மதியழகன், 33 வயது எஸ். வாவீந்திரன் மற்றும் 21 வயது கே. கௌதம் ஆகியோர் குற்றஞ்சாட்டப்பட்டனர்.

மாஜிஸ்திரேட் முகமட் சைஃபுல் அக்மல் முன்னிலையில் இந்த ஆறு பேரும் குற்றச்சாட்டை மறுத்தனர். இவர்களுக்கு தலா 2,500 ரிங்கிட் பிணை அனுமதிக்கப்பட்டது.

இந்த இரண்டு வழக்குகளும் மேல் விசாரணைக்காக வரும் பிப்ரவரி 22-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. தற்காப்பு தரப்பு வழக்கறிஞர்களாக எஸ். விக்னேஸ்வரன் மற்றும் எஸ். அரவிந்த் ஆஜராகினர்.

Related News

பெரும் சோகம்: ரம்புத்தான் பழக் கொட்டைத் தொண்டையில் சிக்கி 5 வயது சிறுவன் உயிரிழப்பு

பெரும் சோகம்: ரம்புத்தான் பழக் கொட்டைத் தொண்டையில் சிக்கி 5 வயது சிறுவன் உயிரிழப்பு

டத்தோ ஸ்ரீ விருது பெற்றுத் தருவதாக லஞ்சம்: முன்னாள் பெண் செய்தியாளர் நீதிமன்றத்தில் மறுப்பு

டத்தோ ஸ்ரீ விருது பெற்றுத் தருவதாக லஞ்சம்: முன்னாள் பெண் செய்தியாளர் நீதிமன்றத்தில் மறுப்பு

துன் மகாதீரின் உடல்நலத்தில் முன்னேற்றம்: மருத்துவக் குழுவினர் திருப்தி

துன் மகாதீரின் உடல்நலத்தில் முன்னேற்றம்: மருத்துவக் குழுவினர் திருப்தி

5G சேவையில் சிலாங்கூர் முதலிடம்: 96.9 சதவீத இலக்கை எட்டி சாதனை

5G சேவையில் சிலாங்கூர் முதலிடம்: 96.9 சதவீத இலக்கை எட்டி சாதனை

ஜோகூர் இளைஞர்களுக்குப் பெரும் வாய்ப்பு: திறன் மேம்பாட்டிற்காக 116.22 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு

ஜோகூர் இளைஞர்களுக்குப் பெரும் வாய்ப்பு: திறன் மேம்பாட்டிற்காக 116.22 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு

2.5 பில்லியன் ரிங்கிட் பணமோசடி புகார்: விசாரணைக்கு அழைக்கப்பட்ட ஐஜேஎம் (IJM) நிறுவனத்தின் 2 உயர்மட்ட நிர்வாகிகள்

2.5 பில்லியன் ரிங்கிட் பணமோசடி புகார்: விசாரணைக்கு அழைக்கப்பட்ட ஐஜேஎம் (IJM) நிறுவனத்தின் 2 உயர்மட்ட நிர்வாகிகள்