Mar 13, 2026
Thisaigal NewsYouTube
பெரும் சோகம்: ரம்புத்தான் பழக் கொட்டைத் தொண்டையில் சிக்கி 5 வயது சிறுவன் உயிரிழப்பு
தற்போதைய செய்திகள்

பெரும் சோகம்: ரம்புத்தான் பழக் கொட்டைத் தொண்டையில் சிக்கி 5 வயது சிறுவன் உயிரிழப்பு

Share:

கெமாமான், ஜனவரி.20-

திரெங்கானு, கெமாமான், ஃபெல்டா நெராம் 1 பகுதியில் உள்ள ஒரு வீட்டில், ரம்புத்தான் பழத்தைச் சாப்பிட்ட 5 வயது சிறுவன் ஒருவன் அதன் கொட்டைத் தொண்டையில் சிக்கி நேற்று திங்கட்கிழமை பரிதாபமாக உயிரிழந்தான்.

நேற்று மதியம் சுமார் 1.30 மணியளவில், அந்தச் சிறுவன் தனது 6 வயது மூத்த சகோதரியுடன் சேர்ந்து ரம்புத்தான் பழங்களைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அவனது சகோதரி பழத்தின் தோலை உரித்துக் கொடுக்க, இருவரும் அதனைச் சாப்பிட்டுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக பழத்தின் கொட்டை சிறுவனின் தொண்டையில் சிக்கிக் கொண்டது.

சிறுவன் பேச முடியாமல் தவிப்பதைக் கண்ட குடும்பத்தினர், அவனை உடனடியாக கெமாமான் மருத்துவமனைக்குக் கொண்டுச் சென்றனர். இருப்பினும், சிகிச்சை பலனின்றி அன்று பிற்பகல் 2.50 மணியளவில் அவன் உயிரிழந்ததாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.

இது குறித்து கெமாமான் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்பிரிடெண்டண்ட் முகமட் ராசி ரோஸ்லி கூறுகையில், "பிரேதப் பரிசோதனையில் சிறுவனின் மரணத்திற்கு மூச்சுத் திணறல் தான் காரணம் எனத் தெரிய வந்துள்ளது. அவனது தொண்டையில் ரம்புத்தான் பழத்தின் கொட்டை இருந்ததை மருத்துவர்கள் உறுதிச் செய்துள்ளனர் என்று முகமட் ராசி தெரிவித்தார்.

Related News

அல்-அக்ஸா பள்ளிவாசலை மூடும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு மலேசியா கடும் கண்டனம் / பாலஸ்தீனர்களுக்கு எதிரான கொடூரச் செயல் என விமர்சித்தது

அல்-அக்ஸா பள்ளிவாசலை மூடும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு மலேசியா கடும் கண்டனம் / பாலஸ்தீனர்களுக்கு எதிரான கொடூரச் செயல் என விமர்சித்தது

புக்கிட் காயு ஹித்தாம் துப்பாக்கிச் சூடு சம்பவம்: பொது செயல்பாட்டுப் படை அதிகாரி கைது

புக்கிட் காயு ஹித்தாம் துப்பாக்கிச் சூடு சம்பவம்: பொது செயல்பாட்டுப் படை அதிகாரி கைது

மேற்கு சவுதியிலிருந்த மலேசியர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர் – தூதரகம் அறிவிப்பு

மேற்கு சவுதியிலிருந்த மலேசியர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர் – தூதரகம் அறிவிப்பு

”நாடெங்கிலும் 540 சட்டவிரோத நுழைவிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன” – ஐஜிபி காலிட் இஸ்மாயில்

”நாடெங்கிலும் 540 சட்டவிரோத நுழைவிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன” – ஐஜிபி காலிட் இஸ்மாயில்

செராஸில் ஸ்பெயின் நாட்டுப் பெண்ணிடம் வழிப்பறிக் கொள்ளை - இரு ஆடவர்கள் கைது

செராஸில் ஸ்பெயின் நாட்டுப் பெண்ணிடம் வழிப்பறிக் கொள்ளை - இரு ஆடவர்கள் கைது

தைப்பிங் மிருகக்காட்சி சாலையிலிருந்து மூன்று யானைகள் ஜப்பானுக்கு அனுப்பிவைக்கப்பட்டன

தைப்பிங் மிருகக்காட்சி சாலையிலிருந்து மூன்று யானைகள் ஜப்பானுக்கு அனுப்பிவைக்கப்பட்டன