Jan 20, 2026
Thisaigal NewsYouTube
டத்தோ ஸ்ரீ விருது பெற்றுத் தருவதாக லஞ்சம்: முன்னாள் பெண் செய்தியாளர் நீதிமன்றத்தில் மறுப்பு
தற்போதைய செய்திகள்

டத்தோ ஸ்ரீ விருது பெற்றுத் தருவதாக லஞ்சம்: முன்னாள் பெண் செய்தியாளர் நீதிமன்றத்தில் மறுப்பு

Share:

மலாக்கா, ஜனவரி.20-

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு 'டத்தோ ஸ்ரீ' விருது பெற்றுத் தருவதாகக் கூறி, 36,000 ரிங்கிட்டிற்கும் அதிகமான லஞ்சப் பணத்தைப் பெற்றதோடு, அது தொடர்பான ஆவணங்களைப் போலியாகத் தயாரித்ததாகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை முன்னாள் செய்தியாளர் ஒருவர் மறுத்துள்ளார்.

44 வயதான நூர்ஃபாதேஹா ஒத்மான் என்ற அந்தப் பெண்மணி, தற்போது மலாக்கா அரசு மருத்துவமனையின் மனநலப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். எனவே, அரசுத் தரப்பு வழக்கறிஞர்களின் கோரிக்கையை ஏற்று, மலாக்கா ஆயர் குரோ செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி Elesabet Paya Wan முன்னிலையில் மருத்துவமனை வார்டிலேயே இந்த விசாரணை இன்று நடைபெற்றது. தன் மீதான நான்கு குற்றச்சாட்டுகளையும் அந்த பெண் பத்திரிகையாளர் மறுத்து விசாரணை கோரினார்.

ஓர் அரசு சாரா அமைப்பின் முன்னாள் உறுப்பினரான இவர், மலாக்கா மாநில விருது வழங்கும் விழாவில் தொழிலதிபர் ஒருவருக்கு 'டத்தோ ஸ்ரீ' பட்டம் பெற்றுத் தருவதாகக் கூறி அவரிடமிருந்து பணம் பெற்றுள்ளார். ஆனால், அத்தகைய விருதை வழங்க இவருக்கு எந்த அதிகாரமும் இல்லை அரசு தரப்பு வழக்கறிஞர்களின் வாதமாகும்.

நான்கு குற்றச்சாட்டுகளையும் சேர்த்து மொத்தம் 36,824 ரிங்கிட் லஞ்சம் மற்றும் ஆவண மோசடியில் ஈடுபட்டதாக அவர் மீது வழக்குப் பதிவுச் செய்யப்பட்டுள்ளது.

Related News

சுங்கை பட்டாணி வன்முறைச் சம்பவங்கள்: 17 வயதுச் சிறுவன் உட்பட 14 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

சுங்கை பட்டாணி வன்முறைச் சம்பவங்கள்: 17 வயதுச் சிறுவன் உட்பட 14 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

பெரும் சோகம்: ரம்புத்தான் பழக் கொட்டைத் தொண்டையில் சிக்கி 5 வயது சிறுவன் உயிரிழப்பு

பெரும் சோகம்: ரம்புத்தான் பழக் கொட்டைத் தொண்டையில் சிக்கி 5 வயது சிறுவன் உயிரிழப்பு

துன் மகாதீரின் உடல்நலத்தில் முன்னேற்றம்: மருத்துவக் குழுவினர் திருப்தி

துன் மகாதீரின் உடல்நலத்தில் முன்னேற்றம்: மருத்துவக் குழுவினர் திருப்தி

5G சேவையில் சிலாங்கூர் முதலிடம்: 96.9 சதவீத இலக்கை எட்டி சாதனை

5G சேவையில் சிலாங்கூர் முதலிடம்: 96.9 சதவீத இலக்கை எட்டி சாதனை

ஜோகூர் இளைஞர்களுக்குப் பெரும் வாய்ப்பு: திறன் மேம்பாட்டிற்காக 116.22 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு

ஜோகூர் இளைஞர்களுக்குப் பெரும் வாய்ப்பு: திறன் மேம்பாட்டிற்காக 116.22 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு

2.5 பில்லியன் ரிங்கிட் பணமோசடி புகார்: விசாரணைக்கு அழைக்கப்பட்ட ஐஜேஎம் (IJM) நிறுவனத்தின் 2 உயர்மட்ட நிர்வாகிகள்

2.5 பில்லியன் ரிங்கிட் பணமோசடி புகார்: விசாரணைக்கு அழைக்கப்பட்ட ஐஜேஎம் (IJM) நிறுவனத்தின் 2 உயர்மட்ட நிர்வாகிகள்