கோலாலம்பூர், டிச. 13-
சர்சைக்குரிய வலைவாசியான பாபாகோமா என்ற வான் முகமட் அஸ்ரி வான் டெரிஸ் இன்று புத்ராஜெயாவில் அவரின் இல்லத்தில் கைது செய்யப்பட்டதை போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருடின் ஹுசேன் உறுதிபடுத்தினார்.
நிறுவனம் ஒன்றின் பெயரைப் பயன்படுத்தி, வசூல் வேட்டை மோசடியில் ஈடுபட்டது தொடர்பில் புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம் அவரை கைது செய்துள்ளது.
அந்த சர்ச்சைக்குரிய நபர், அம்லா எனப்படும் சட்டவிரோதப் பணம் மாற்றும் தடுப்பு சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்று ஐஜிபி குறிப்பிட்டார்.








