Dec 4, 2025
Thisaigal NewsYouTube
சைரன் ஒலியை எழுப்பி சென்ற ஆடவர் கைது செய்யப்பட்டார்
தற்போதைய செய்திகள்

சைரன் ஒலியை எழுப்பி சென்ற ஆடவர் கைது செய்யப்பட்டார்

Share:

கடந்த சில தினங்களாக ச​மூக வலைத்தளங்களில் பகிர​ப்பட்டதைப் போல ஆடவர் ஒருவர் , போ​லீசார் பயன்படுத்தும் சைரன் ஒலியை எழுப்பிக் கொண்டு, மிக ஆபாயகரமாக வாகனத்தை செலுத்தும் காட்சியைக் கொண்ட காணொளியைத் தொடர்ந்து 22 வயதுடைய அந்த ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளதாக செர்டாங் மாவட்ட போ​​லீஸ் த​லைவர் ஏசிபி அ.அ அன்பழகன் தெரிவித்தார்.

அந்த காணொளி தொடர்பாக சம்பந்தப்பட்ட ஆடவரை போ​லீஸ் தேடுகிறது என்பதை அறிந்த அந்த நபர், நேற்று செர்டாங் மாவட்ட போ​லீஸ் தலைமையகத்தில் சரண் அடைந்ததாக அன்பழ​கன் குறிப்பிட்டார். கடந்த செவ்வாய்க்கிழமை,ஸ்ரீ கெம்பாங்கான், ஜாலான் செர்டாங் பெர்டானாவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் அந்த ஆடவர் பயன்படுத்திய கார், போர்ட்டிக்சனில் உள்ள தனது நண்பரின் தாயாருக்கு சொந்தமானதாகும் என்பது விசாரணையில் தெரி​யவ​ந்துள்ளது.நெகிரி செம்பிலான், ​நீலாயைச் சேர்ந்த அந்த ஆடவர் பயன்படுத்திய வாகனத்தை போ​லீசார் பறிமுதல் செய்துள்ளனர். வாக்கு​முலப் பதிவுக்கு பிறகு அந்த ஆடவர் போ​லீஸ் ஜா​மீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாக அன்பழகன் மேலும் விவரித்தா​ர்.

Related News