Aug 26, 2026
Thisaigal NewsYouTube
மலாக்கா நீர் சறுக்கு விளையாட்டில் விபத்து: இரு பெண்கள் படுகாயம்
தற்போதைய செய்திகள்

மலாக்கா நீர் சறுக்கு விளையாட்டில் விபத்து: இரு பெண்கள் படுகாயம்

Share:

மலாக்கா மாநிலம், ஆயர் கெரோவில், நீர்ச் சறுக்கு விளையாட்டில் ரப்பர் படகு மோதியதில், இரு பெண்கள் படுகாயமடைந்தனர்.

இச்சம்பவத்தில் 46 வயது பெண்ணின் தலையில் இரத்தக் கட்டி ஏற்பட்டதுடன், 31 வயது பெண் மூளையதிர்ச்சிக்கு ஆளானார்.

இருவரும் குடும்ப உறுப்பினர்களுடன் விடுமுறைக்காக வந்திருந்த நிலையில், ரப்பர் படகில் பயணித்தபோது இந்த விபத்து ஏற்பட்டதாக Melaka Tengah மாவட்ட போலீஸ் தலைவர் ஹலிம் அபாஸ் தெரிவித்துள்ளார்.

மேலும், படகு கீழே வந்த போது ஏதோ ஒன்றில் மோதியதில், ஒருவரின் தலை சுவரில் பலமாக மோதியதாக கூறப்படுகின்றது.

இந்த மோதலில் இருவரும் சுயநினைவிழந்த நிலையில் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் ஹலிம் அபாஸ் குறிப்பிட்டுள்ளார்

Related News