Mar 14, 2026
Thisaigal NewsYouTube
வீடு தீப்பற்றியதில் மூவர் மூச்சுத் திணறல்
தற்போதைய செய்திகள்

வீடு தீப்பற்றியதில் மூவர் மூச்சுத் திணறல்

Share:

ஆயேர் ஈத்தாம், மெடான் அங்சானா அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடொன்றில் தீப்பற்றியதில் மூவர் மூச்சுத் திணறலுக்கு ஆளாகினர்.

40 முதல் 66 வயதிற்கு உட்பட்ட தாய் மற்றும் இரு பிள்ளைகளை பினாங்கு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

நேற்று இரவு 9.59 மணியளவில் கிடைக்கப் பெற்ற அவசர அழைப்பினை தொடர்ந்து தீயணைப்பு, மீட்பு படையினர் அவ்விடத்திற்கு விரைந்ததாக பாயா தெருபோங், தீயணைப்பு, மீட்பு படை தலைவர் முஹமாட் சைனி சைனுடின் தெரிவித்தார்.

60 சதவீதம் வீடு தீயில் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தீப்பற்றிய காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் முஹமாட் சைனி கூறினார்.

Related News