தமது ஒன்பது வயது சகோதரனை கழுத்து நெரித்துக் கொன்றதாக சந்தேகிக்கப்படும் 14 வயது மாணவனை விசாரணைக்கு ஏதுவாக 7 நாட்களுக்கு தடுத்து வைப்பதற்கு போலீசார் நீதிமன்ற ஆணையைப் பெற்றுள்ளனர். இரண்டாம் படிவ மாணவனான அந்த சிறுவன், இன்று காலையில் மலாக்கா, ஆயர் குரோ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டு, அவனை தடுத்து வைப்பதற்கான ஆணையை போலீசார் பெற்றனர்.
மலாக்கா, கம்போங் புக்கிட் பியாத்து என்ற இடத்தில் ஒன்பது வயது சிறுவன், தனது மூத்த சகோதரனால் கழுத்து நெரித்து கொன்றதாக கிடைக்கப்பெற்ற புகாரின் அடிப்படையில் அந்த சிறுவனை போலீசார் கைது செய்தனர். தனது இரண்டு மகன்களும் வீட்டில் சண்டையிட்டுக்கொண்டு இருந்ததை வீட்டில் பொருத்தப்பட்டிரந்த ரகசிய கேமரா மூலமாக கைப்பேசியில் பார்த்துக்கொண்டு இருந்த அந்த சிறுவர்களின் தாயார் , அண்டை வீட்டுக்காரர்களுடன் கைப்பேசி வழி தொடர்பு கொண்டு வீட்டிற்கு சென்று பார்க்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார். அண்டை வீட்டுக்காரர்கள் அந்த வீட்டிற்கு செல்வதற்கு முன்னதாகவே அந்த ஒன்பது வயது சிறுவன் மூச்சற்ற நிலையில் இறந்து கிடந்தது தெரியவந்தது.

Related News

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு

நீதிபதிகளுக்கு பதவி நியமனக் கடிதங்கள் ஒப்படைப்பு

கேஎல்ஐஏ 1-இல் 14 கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

சமூக ஆர்வலர் அம்ரி சே மாட் மாயமான வழக்கில் போலீஸ் விசாரணை என்ன ஆனது? - உயர்நீதிமன்றம் கேள்வி

இணையத்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலிய துஷ்பிரயோகங்கள் அதிகரிப்பு – உள்துறை அமைச்சர் தகவல்


