Jan 21, 2026
Thisaigal NewsYouTube
அந்த சிறுவனுக்கு 7 நாள் தடுப்புக்காவல்
தற்போதைய செய்திகள்

அந்த சிறுவனுக்கு 7 நாள் தடுப்புக்காவல்

Share:

தமது ஒன்பது வயது சகோதரனை கழுத்து நெரித்துக் கொன்றதாக சந்தேகிக்கப்படும் 14 வயது மாணவனை விசாரணைக்கு ஏதுவாக 7 நாட்களுக்கு தடுத்து வைப்பதற்கு போ​லீசார் நீதிமன்ற ஆணையைப் பெற்றுள்ளனர். இரண்டாம் படிவ மாணவனான அந்த ​சிறுவன், இன்று காலையில் மலாக்கா, ஆயர் குரோ மாஜிஸ்திரேட் ​நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டு, அவனை தடுத்து வைப்பதற்கான ஆணையை போலீசார் பெற்றனர்.

மலாக்கா, கம்போங் புக்கிட் பியாத்து என்ற இடத்தில் ஒன்பது வயது சிறுவன், தனது மூத்த சகோதரனால் கழுத்து நெரித்து கொன்றதாக கிடைக்கப்பெற்ற புகாரின் அடிப்படையில் அந்த சிறுவனை போ​​லீசார் கைது செய்தனர். தனது இரண்டு மகன்களும் வீட்டில் சண்டையிட்டுக்கொண்டு இருந்ததை வீட்டில் பொருத்தப்பட்டிரந்த ரகசிய கேமரா மூலமாக கைப்பேசியில் பார்த்துக்கொண்டு இருந்த அந்த சிறுவர்களின் தாயார் , அண்டை வீட்டுக்காரர்களுடன் கைப்பேசி வழி தொடர்பு கொண்டு வீட்டிற்கு சென்று பா​ர்க்கும்படி கே​ட்டுக்கொண்டுள்ளார். அண்டை வீட்டுக்காரர்கள் அந்த வீட்டிற்கு செல்வதற்கு முன்னதாகவே அந்த ஒன்பது வயது சிறுவன் ​மூச்சற்ற நிலையில் இறந்து கிடந்தது தெரியவந்தது.

Related News

மலாய் மொழி மற்றும் வரலாறு பாடத் தேவைகள் குறித்து ஃபாட்லீனாவுடன் டோங் சோங் சந்திப்பு நடத்த விருப்பம்

மலாய் மொழி மற்றும் வரலாறு பாடத் தேவைகள் குறித்து ஃபாட்லீனாவுடன் டோங் சோங் சந்திப்பு நடத்த விருப்பம்

6 வீடுகளுக்குத் தீ வைப்பு: வேலையற்ற நபர் மீது குற்றச்சாட்டு

6 வீடுகளுக்குத் தீ வைப்பு: வேலையற்ற நபர் மீது குற்றச்சாட்டு

நாடாளுமன்றத்தில் பேசிக் கொண்டிருந்த இரு துணை அமைச்சர்களைக் கண்டித்த துணைச் சபாநாயகர்

நாடாளுமன்றத்தில் பேசிக் கொண்டிருந்த இரு துணை அமைச்சர்களைக் கண்டித்த துணைச் சபாநாயகர்

முதலாம் ஆண்டில் சேர்வதற்கு முன்பாக 6 வயது மாணவர்களுக்குச் சிறப்பு சோதனை - கல்வி அமைச்சர் தகவல்

முதலாம் ஆண்டில் சேர்வதற்கு முன்பாக 6 வயது மாணவர்களுக்குச் சிறப்பு சோதனை - கல்வி அமைச்சர் தகவல்

8 ரிங்கிட் முன்பணம் செலுத்த முயன்று 8,800 ரிங்கிட்  இழப்பு: வாட்ஸ்அப் இணைப்பை கிளிக் செய்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

8 ரிங்கிட் முன்பணம் செலுத்த முயன்று 8,800 ரிங்கிட் இழப்பு: வாட்ஸ்அப் இணைப்பை கிளிக் செய்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

வீட்டுக்கடன் உத்தரவாதத் திட்டம்: 1 லட்சம் பேர் சொந்த வீடு வாங்க இலக்கு – அமைச்சர் ங்கா கோர் மிங் அறிவிப்பு

வீட்டுக்கடன் உத்தரவாதத் திட்டம்: 1 லட்சம் பேர் சொந்த வீடு வாங்க இலக்கு – அமைச்சர் ங்கா கோர் மிங் அறிவிப்பு