Jan 19, 2026
Thisaigal NewsYouTube
பிரதமரிடம் எந்த உத்தரவும் இல்லை
தற்போதைய செய்திகள்

பிரதமரிடம் எந்த உத்தரவும் இல்லை

Share:

லஞ்ச ஊழல் தொடர்பில், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணைக்கு ஆளாகியுள்ள மனிதவள அமைச்சர் வி.சிவக்குமார், விடுப்பில் செல்ல வேண்டும் என்பது குறித்து, பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் எந்தவொரு உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்று போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக் தெரிவித்துள்ளார்.

எஸ்.பி.ஆர்.எம் விசாரணையில் அமைச்சர் சிவக்குமார் சந்தேக பேர்வழி அல்ல. மாறாக, சில விளக்கங்களைக் பெறுவதற்கு அவரின் ஒத்துழைப்பை அந்த ஆணையம் நாடியுள்ளதாக ஜசெக பொதுச் செயலாளருமான ஆண்டனி லோக் குறிப்பிட்டார்.

Related News