ஜனவரியில் தொடங்கும் ரஹ்மா விற்பனைத் திட்டத்தில் மேம்படுத்தப்பட்டு, சந்தை வியாபாரிகளுக்கான பொருட்கள் அப்படியலில் இடம்பெறச் செய்யப்படும் என்று உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சர் அர்மிசான் அலி தெரிவித்தார்.
இத்திட்டம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுக்குப் பிறகு இந்த மேம்பாடு செய்யப்படும் என அவர் சொன்னார்.
அந்த ஆய்வின்படி, 80 சதவிகிதம் இத்திட்டம் குறித்து நேர்மறையான கருத்துகளைத் தெரிவித்திருப்பதாகவும் 20 சதவிகிதம் அத்திட்டம் மேம்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஈரமான பொருட்கள் என வகைப்படுத்தப்பட்ட மீன்கள், கீரைகள், காய்கறிகள் போன்றவற்றை உட்படுத்தப்பட பரிந்துரைக்கப்பட்டதைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு மேம்படுத்தப்பட உள்ளது என அர்மிசான் அலி சொன்னார்.
தற்போது, கோழி இறைச்சி மட்டும் இடம்பெற்றுள்ளது. இல்லாத ஈரமான பொருட்களை அடுத்த ஆண்டு கொண்டு வரப்பட கலந்தாலோசிக்கப்பட்டு வருகிறது என்றார்.








