Apr 5, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

ஆசியான்: 9,000க்கும் மேற்பட்ட காவல் துறை அதிகாரிகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவர்

Share:

கோலாலம்பூர், ஜன.24-

ஆசியான் 2025 மாநாட்டின் போது பாதுகாப்புக்காகவும் அமைதியை பராமரிக்கவும் 9000க்கும் மேற்பட்ட கோலாலம்பூர் காவல்துறை அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என கோலாலம்பூர் காவல் துறைத் தலைவர் டத்தோ ருஸ்டி முகமட் ஈசா குறிப்பிட்டார். ஏப்ரல், மே, அக்டோபர் மாதங்களில் தலைநகரிலும் புத்ராஜெயாவிலும் 186 கூட்டங்கள் நடைபெற உள்ளன. வெளிநாட்டு தூதர்கள் மட்டும் இன்றி பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. தேவைப்பட்டால் புக்கிட் அமான் காவல் துறைத் தலைமையகத்தின் உதவியையும் போக்குவரத்து காவல்துறையின் உதவியையும் பெறப்படும் என தெரிவித்தார்.

வெளிநாட்டு தூதர்கள் கலந்து கொள்ளும் ஆசியான் மாநாடு சுமூகமாக நடைபெறுவதை உறுதி செய்வதில் மலேசிய காவல்துறை முக்கிய பங்கு வகிக்கிறது. கோலாலம்பூர் நகரம் பாதுகாப்பாகவும் நல்ல நிலையிலும் இருப்பதை உறுதி செய்வதன் மூலம் பார்வையாளர்களும் தூதர்களுக்கும் எந்தவித கவலையும் ஏற்படாத வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் மேலும் கூறினார்.

Related News

சாலையோரக் கடையிலிருந்து நாளொன்றுக்கு 15,000 பொட்டலங்கள்: 'நாசி லெமாக் சலேஹா'வின் எழுச்சியும் KUSKOP ஆதரவும்

சாலையோரக் கடையிலிருந்து நாளொன்றுக்கு 15,000 பொட்டலங்கள்: 'நாசி லெமாக் சலேஹா'வின் எழுச்சியும் KUSKOP ஆதரவும்

டீசல் கடத்தல் கும்பல் பிடிபட்டது: பினாங்கில் 300 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்

டீசல் கடத்தல் கும்பல் பிடிபட்டது: பினாங்கில் 300 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்

திரியாங் வெட்டுச் சம்பவத்தில் தொடர்புடைய நபர் கைது; மேலும் 6 பேருக்கு வலை வீச்சு

திரியாங் வெட்டுச் சம்பவத்தில் தொடர்புடைய நபர் கைது; மேலும் 6 பேருக்கு வலை வீச்சு

கடும் வெப்பம்: வீட்டிலிருந்தே கல்வி முறையை அமல்படுத்த பெற்றோர் கோரிக்கை

கடும் வெப்பம்: வீட்டிலிருந்தே கல்வி முறையை அமல்படுத்த பெற்றோர் கோரிக்கை

மக்களின் நலனே முக்கியம்: அரசின் கொள்கைகளை மக்களிடம் கொண்டுச் சேர்க்க பிரதமர் அழைப்பு

மக்களின் நலனே முக்கியம்: அரசின் கொள்கைகளை மக்களிடம் கொண்டுச் சேர்க்க பிரதமர் அழைப்பு

செகாமட் விபத்து: சம்பந்தப்பட்ட டிரெய்லர் நிறுவனம் மீது ஜேபிஜே பாதுகாப்பு தணிக்கை

செகாமட் விபத்து: சம்பந்தப்பட்ட டிரெய்லர் நிறுவனம் மீது ஜேபிஜே பாதுகாப்பு தணிக்கை

ஆசியான்: 9,000க்கும் மேற்பட்ட காவல் துறை அதிகாரிகள் பாதுக... | Thisaigal News