Aug 8, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

ஆசியான்: 9,000க்கும் மேற்பட்ட காவல் துறை அதிகாரிகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவர்

Share:

கோலாலம்பூர், ஜன.24-

ஆசியான் 2025 மாநாட்டின் போது பாதுகாப்புக்காகவும் அமைதியை பராமரிக்கவும் 9000க்கும் மேற்பட்ட கோலாலம்பூர் காவல்துறை அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என கோலாலம்பூர் காவல் துறைத் தலைவர் டத்தோ ருஸ்டி முகமட் ஈசா குறிப்பிட்டார். ஏப்ரல், மே, அக்டோபர் மாதங்களில் தலைநகரிலும் புத்ராஜெயாவிலும் 186 கூட்டங்கள் நடைபெற உள்ளன. வெளிநாட்டு தூதர்கள் மட்டும் இன்றி பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. தேவைப்பட்டால் புக்கிட் அமான் காவல் துறைத் தலைமையகத்தின் உதவியையும் போக்குவரத்து காவல்துறையின் உதவியையும் பெறப்படும் என தெரிவித்தார்.

வெளிநாட்டு தூதர்கள் கலந்து கொள்ளும் ஆசியான் மாநாடு சுமூகமாக நடைபெறுவதை உறுதி செய்வதில் மலேசிய காவல்துறை முக்கிய பங்கு வகிக்கிறது. கோலாலம்பூர் நகரம் பாதுகாப்பாகவும் நல்ல நிலையிலும் இருப்பதை உறுதி செய்வதன் மூலம் பார்வையாளர்களும் தூதர்களுக்கும் எந்தவித கவலையும் ஏற்படாத வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் மேலும் கூறினார்.

Related News

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்

மூன்றாவது முன்னாள் பிரதமருக்கும் முறுக்குகிறது சட்டப் பாசம்: நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் இஸ்மாயில் சப்ரி

மூன்றாவது முன்னாள் பிரதமருக்கும் முறுக்குகிறது சட்டப் பாசம்: நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் இஸ்மாயில் சப்ரி