Apr 17, 2026
Thisaigal NewsYouTube
குவாந்தானில் பயங்கரம்: பிரேக் பிடிக்காததால் 5 வாகனங்கள் மீது மோதிய ட்ரெய்லர்
தற்போதைய செய்திகள்

குவாந்தானில் பயங்கரம்: பிரேக் பிடிக்காததால் 5 வாகனங்கள் மீது மோதிய ட்ரெய்லர்

Share:

குவாந்தான் - கெபெங் புறவழிச்சாலையில் இன்று காலை 11 மணியளவில் ஐந்து வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளாகின.

முன்னால் விபத்து ஒன்று நடந்ததால் வாகனங்கள் நின்றுகொண்டிருந்தபோது, பின்னால் வந்த ஒரு டிரெய்லர் லாரி கட்டுப்பாட்டை இழந்து, முன்னால் நின்றிருந்த ஹோண்டா சிட்டி, டொயோட்டா வேன், மைவி மற்றும் மற்றொரு ட்ரெய்லர் மீது அடுத்தடுத்து மோதியது.

டிரெய்லரின் பிரேக் சரியாகச் செயல்படாததே இந்த விபத்திற்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் 36 வயதுடைய வேன் ஓட்டுநர் சிறு காயங்களுடன் தப்பினார்; மற்ற நான்கு ஓட்டுநர்களும் காயமின்றி உயிர் பிழைத்தனர். ஓட்டுநரின் கவனக்குறைவே விபத்திற்குக் காரணம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related News