Sep 2, 2026
Thisaigal NewsYouTube
நோபல் அமைதிப் பரிசை வென்ற அணு ஆயுத எதிர்ப்பு இயக்கத்தின் மலேசிய முன்னோடி காலமானார்
தற்போதைய செய்திகள்

நோபல் அமைதிப் பரிசை வென்ற அணு ஆயுத எதிர்ப்பு இயக்கத்தின் மலேசிய முன்னோடி காலமானார்

Share:

மலேசிய மகப்பேறு மருத்துவரும், அணு ஆயுதங்களுக்கு எதிரான உலகளாவிய பிரசாரகருமான Datuk Dr Ronald McCoy , தனது 96 ஆவது வயதில் காலமானார்.

அவரது மறைவை அவரது மகன் ஸ்டீவன் மெக்காய் உறுதிப்படுத்தியுள்ளார்.

1930ஆம் ஆண்டு நெகிரி செம்பிலான், சிரம்பானில் பிறந்த டாக்டர் ரொனால்ட், 2005ஆம் ஆண்டு முதல் அணு ஆயுதங்களை ஒழிப்பதற்கான உலகளாவிய இயக்கத்தில் தீவிரமாகப் பணியாற்றினார்.

அவர் பங்கேற்ற International Campaign to Abolish Nuclear Weapons – ICAN இயக்கம், உலகம் முழுவதும் சுமார் 100 நாடுகளில் நூற்றுக்கணக்கான அரசு சாரா அமைப்புகளை ஒன்றிணைத்தது.

2017ஆம் ஆண்டு, அணு ஆயுதங்களால் ஏற்படக்கூடிய பேரழிவு விளைவுகள் குறித்து உலகின் கவனத்தை ஈர்த்ததற்காக ICAN-க்கு நோபல் அமைதிப் பரிசு வழங்கப்பட்டது.

மேலும், அணு ஆயுதங்களைத் தடை செய்வதற்கான ஐக்கிய நாடுகள் சபையின் ஒப்பந்தத்தை உருவாக்கிய பிரசாரத்திலும் ICAN முக்கியப் பங்காற்றியது.

டாக்டர் ரொனால்ட், 1965ஆம் ஆண்டு பெட்டாலிங் ஜெயா, அசுந்தா மருத்துவமனையில் மருத்துவ ஆலோசகராகப் பணியில் சேர்ந்ததுடன், பின்னர் பந்தாய் மருத்துவ மையத்திலும் பணியாற்றினார். 1996ஆம் ஆண்டு மருத்துவப் பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.

அவரது இறுதி அஞ்சலி வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் பெட்டாலிங் ஜெயாவில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.

Related News