ஜோகூர் பாரு, செப்டம்பர்.15-
தாம் சம்பந்தப்பட்ட ஆபாச வீடியோ படம் இருப்பதாகக் கூறி, நாடளுமன்ற உறுப்பினர்களை இலக்காகக் கொண்டு மிரட்டப்பட்டு வரும் சம்பவத்தில் ஆகக் கடைசியாக ஜோகூர், தெப்ராவ், பிகேஆர் எம்.பி. ஜிம்மி புவா வீ சே பலிகடா ஆக்கப்பட்டுள்ளார்.
AI தொழில்நுட்பத்தால் தயாரிக்கப்பட்ட போலி ஆபாச வீடியோப் படத்தை அனுப்பி, ஜிம்மி புவா மிரட்டப்பட்டுள்ளார்.
செப்டம்பர் 15 ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு தாம் இத்தகைய மிரட்டலை மின் அஞ்சல் வழி பெற்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.








